கடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.
Tuesday, December 30, 2008
ஆரம்பமே கோளாறாய் இருக்கிறது – பகுஜன் சமாஜ் கட்சி!
உத்திரபிரதேசத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து ஆண்டு கொண்டிருக்கும் குமாரி மாயாவதி அம்மையாருக்கு, சின்ன சின்ன ஆசையில் ஒரு ஆசை நாட்டின் பிரதமராவது. தமிழகத்தில் ஏற்கனவே ஒரு செல்வி அம்மையார் இருப்பதால், இவரை குமாரி என அழைக்கிறார்கள் என நினைக்கிறேன்
ஒரு மாநிலத்திலேயே இருந்தால், பிரதமராக முடியாது என்று நினைத்தவர் பல மாநிலங்களுக்கும் தன் கட்சியை பரவ செய்வதற்கான முயற்சிகளை இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார்.
பிரதம வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் உத்திரபிரதேசத்தின் பங்கு அதிகம். ஏனென்றால்...இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் உத்திரபிரதேசம். மக்கள் தொகை அடிப்படையில் அங்கு தான் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம். மக்களைவையில் 85 எம்பிக்கள். ராஜ்யசபாவில் 31 எம்பிக்கள். (தமிழ்நாடு சார்பாக - மக்களவையில் 39. ராஜ்யசபாவில் 18 எம்பிக்கள்).
பிரதமர்களின் வரலாறும் அப்படித்தான் இருக்கிறது. இந்தியாவை ஆண்ட பல பிரதமர்கள் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
இதன் அடிப்படையில் தான்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரு சகோதரத்துவ மாநாட்டை சென்னையில் நடத்தி முடித்தார். சிதறிக்கிடக்கும் தலித் அமைப்புகளை ஒன்று சேர்த்து வலுவான கட்சியாக மாற்ற போகிறார்களாம்.
இந்த மாநாட்டுக்கு பிறகு, இரண்டு நிகழ்வுகள் பகுஜன் சமாஜ் கட்சியைப் பற்றி அறிமுகத்தை அறிய முடிகிறது..
ஒரு நிகழ்வு – ஒரு பொறியாளர் கொலை. மாயாவதி அவர்களுடைய பிறந்த நாள் ஜனவரி 15யாம். இதற்காக அவருடைய கட்சி 1000 கோடி என இலக்கு வைத்து வசூலை தொடங்கியிருக்கிறார்களாம்.
ப.ஜ. கட்சியின் எம்.எல்.ஏ. சேகர் திவாரியினுடைய ஆட்கள் வசூல் வேட்டையில்... அவுலியா மாவட்டத்தை சேர்ந்த பொறியாளர் குப்தாவின் வீடு புகுந்து, அவருடைய மனைவியை குளியறையில் தள்ளி அடைத்து, கேட்ட பணத்தை கொடுக்கதாததால் அவரை அடித்தே கொன்றுவிட்டார்கள்.
உத்திர பிரதேச அரசும் இந்த கொலையில் சேகர் திவாரிக்கு சம்பந்தம் உண்டு என ஒப்புக்கொண்டிருக்கிறது. இப்பொழுது அந்த எம்.எல்.ஏ. சிறையில் இருக்கிறார்.
கடந்த ஒரு வாரமாக இந்த நிகழ்வு உ.பியை கலக்கி கொண்டிருக்கிறது. மாயாவதியை ராஜினாமா செய்ய சொல்லி, எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு செய்தி. இவர் தனது கட்சியை இந்தியா முழுவதும் எடுத்து செல்ல ஆசைப்பட்டது எல்லாம் சரி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, உத்திரபிரதேசத்தில் அதன் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 800 கோடிக்கு திட்டம் போட்டிருக்கிறார்களாம். அந்த செய்தியை தமிழ்நாட்டில் எல்லா தினசரிகளிலும் முழுப்பக்க விளம்பரம் செய்துள்ளனர். விளம்பரத்தின் கீழே பகுஜன் கட்சி பெயர் இருக்கும் எனப் பார்த்தால்... உத்திரபிரதேசத்தின் அரசு விளம்பரமாக இருக்கிறது.
அடப்பாவிகளா! தமிழ்நாட்டிலும் பார்க்கிறோம். அடிக்கல் நாட்டப்பட்டதோடு பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுவிடும். 800 கோடி திட்டம் 80 கோடி அளவிற்காவது நிறைவேற்றப்படும் என்பது ஒரு கேள்விக்குறி. இவர்கள் போடும் திட்டத்தின் நிலை இப்படியிருக்க... தன் கட்சியை வளர்க்க மக்கள் வரிப்பணத்தை இலட்சகணக்கில் வாரி இறைப்பது எந்த விதத்தில் சரி?
ஏற்கனவே இங்குள்ள கட்சிகள் எல்லாம் மோசமாக இருக்க, உத்திரபிரதேசத்தில் இறக்குமதியாகும் கட்சியும் இன்னும்
மோசமாக இருந்தால்? சிரமம். நாட்டையும், நாட்டு மக்களையும் நினைத்தால் பாவமாக இருக்கிறது.
Wednesday, December 17, 2008
பேச்சிலர் சமையல் – அத்தியாயம் 3
“சமையல்” – அதன் தன்மை, முறை, அதில் உள்ள சிக்கல்கள் பற்றி பேசுவது இடையிடையே வைத்துக்கொள்வோம்.
இப்பொழுது சமையல் – வகைகளை ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.
இந்த பதிவில் – ‘ரெடிமேடு சாம்பார்’
மெட்ரோ சிட்டி பர பர வாழ்வில் பல நாள்கள் எங்களுக்கு உதவியது இந்த சாம்பார் தான்.
இந்த சாம்பார் இட்லி அல்லது தோசைக்கு தான். சாப்பாட்டுக்கு உதவாது. (சாப்பாட்டுக்கு ருசி குறைவாக இருக்கும்).
நம் வசிக்கிற எல்லா பகுதிகளிலும் அரைத்த மாவு எளிதாக கிடைக்கும். நல்ல பிராண்டாய் தேடிப்பிடித்து வாங்குவது நம் திறன் சார்ந்தது. எங்கள் பகுதியில் 5 இடங்களில் மாவு கிடைக்கும். ஒவ்வொரு இடமாய் வாங்கி பயன்படுத்தி, சோதித்து, ஐந்தாவது இடத்தில் கிடைத்த மாவு நன்றாக இருந்து இப்பொழுது தொடர்ச்சியாக வாங்குகிறோம்.
தேவையான பொருட்கள் : பச்சை பருப்பு அல்லது துவரம் பருப்பு அரை டம்ளர். (டம்ளரின் கொள்ளளவு - 125 மிலி). 1 தக்காளி,சாம்பார் (சின்ன) வெங்காயம் 10 துண்டுகள். இரண்டு காய்ஞ்ச மிளகாய், சிறிதளவு - மஞ்சள் பொடி, கடுகு உளுந்து, கறிவேப்பிலை, 5 மிலி எண்ணெய். (மூன்று பேருக்கு தேவையானதை குறிப்பிட்டிருக்கிறேன்)
செய்முறை :
செய்முறையில் எல்லா வகைகளுக்கும் சில சமையல் பாத்திரங்கள் அடிக்கடி வரும். அதையெல்லாம் வாங்கி நிரந்தரமாய் வாங்கி வைத்து கொள்வது நல்லது.
5 லி, 10 லி. குக்கர் ஒன்று. தோசைக்கல்
முதலில் (5லி.) குக்கரில் பருப்பை போட்டு இரண்டு முறை தண்ணீரில் கழுவி.. பிறகு, பருப்பின் அளவை விட நான்கு மடங்கு நல்ல தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். அதில் 5 வெங்காய துண்டுகளை (உறித்து) சின்னதாய் வெட்டியும் போடலாம், முழுதாகவும் போடலாம். 1 தக்காளியை 4 துண்டுகளாக வெட்டி போட்டு கொள்ளவும். சிறிதளவு மஞ்சள் பொடி, தேவையான உப்பு பொட்டு, கொஞ்சம் எண்ணெய் விட்டு மூடி கொதிக்க வைக்க வேண்டும். பச்சை பருப்பு என்றால் 8 நிமிடம். துவரம் பருப்பு என்றால் 11 நிமிடம் வேகவிட வேண்டும்.
பிறகு, ஒரு தாளிப்பதற்கு ஒரு பாத்திரம் எடுத்து, அடுப்பில் வைத்து, கொஞ்சம் எண்ணெய் விட வேண்டும். எண்ணெய் சுட்டதும், சிறிதளவு கடுகு உளுந்து, கருவேப்பிலை போட வேண்டும். சட சட வெடிக்கும். அப்பொழுது காய்ஞ்ச மிளகாயை போட்டு, வெட்டி வைத்துள்ள மீதி 5 வெங்காய துண்டுகளை போட்டு, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு, குக்கரில் உள்ளதை இந்த பாத்திரத்தில் ஊற்றினால்... ரெடிமேடு சாம்பார் ரெடி.
பின்குறிப்பு : இதில் எங்கேனும் தவறு நடக்கும் பட்சத்தில், அது சாம்பாரில் பிரதிபலிக்கும்.
எங்களுடைய அனுபவத்தில்... இந்த சாம்பாரில்..
ஒருமுறை, குக்கரில் எல்லாம் போட்டுவிட்டு அடுப்பில் வைத்து விட்டு வந்த பின்பு 10 நிமிடம், 15 நிமிடம் ஆகிவிட்டது. விசில் வந்த பாடில்லை. போய் பார்த்தால்... அடுப்பை பற்ற வைக்கவேயில்லை.
Tuesday, December 9, 2008
போய் சேரும் இடம் – பாகம் 2 ( final Destination – part 2)
***
அதில் ஒரு படம் “போய் சேரும் இடம்” (கதைப்படி இப்படித்தான் மொழி பெயர்க்க முடிகிறது என்னால்)
கதையை சுருக்கமாய் சொல்வதென்றால்...
நண்பர்களுடன் பிக்னிக் கிளம்புகிறாள் ஒரு இளம்பெண். செல்கிற வழியில் முக்கிய சாலையில், ஒரு சிக்னலில் காத்திருக்கும் பொழுது....இன்னும் சில நிமிடங்களில் கோர விபத்து நடக்க போவதாய் காட்சி படிமங்களாய் தெரிகிறது.
சுயநினைவுக்கு வந்தால் காட்சி படிமங்களாய் தெரிந்தது உண்மையில் ஒவ்வொன்றாய் நிகழ்கிறது. பதட்டமாகி அழுது வண்டியை மேற்கொண்டு நகர்த்தாமல்... வழி மறித்து நிற்க ஒரு போக்குவரத்து போலீஸ் விசாரிக்கிறார். விவரம் சொல்கிறாள். இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, அவள் சொன்ன மாதிரியே அங்கு கோர விபத்து நடக்கிறது. (நானும் 10 ஆண்டுகளாக மேலை நாட்டு படங்கள் பார்த்திருக்கிறேன். இப்படி மனம் பத பதைக்க வைக்கிற விபத்தை எந்த படத்திலும் பார்த்ததில்லை)
இதுவரை.. இ.எஸ்.பி. சக்தி என நாம் ஏற்கனவே நாம் தெரிந்த கதை தான். இனிமேல் தான் கதையில் நாம் அறியாத திருப்பம் இருக்கிறது.
ஏற்கனவே இதே முறையில், விமான விபத்து முன்கூட்டியே அறியப்பட்டு, தப்பித்த சில பேர் அடுத்தடுத்து கோரமான முறையில் ஒவ்வொருவராக சாகிறார்கள். (முதல் பாகம் என நினைக்கிறேன்)
அதே மாதிரி இப்பொழுதும் நடந்துவிடுமோ என பயப்படுகிறார்கள். பயந்த படியே, நாயகிக்கு காட்சி படிமமாய் தெரிந்த விபத்தில் எந்த வரிசையில் இறந்தார்களோ அதே வரிசையில் ஒவ்வொருவராக நமக்கு குலை நடுங்கிறபடி மரணத்தால் அடுத்தடுத்து துரத்தப்பட்டு கோரமாய் சாகிறார்கள்.
இறுதியில்... நாயகியும், போலீஸாக வருகிற நாயகனும் ஒரு ஜிம்மிக்ஸ் வேலை பார்த்து, மரணத்திலிருந்து தப்பிக்கிறார்கள் (!).
***
கதை – பூ சுத்தல் கதை. விதிவசக் கோட்பாடு. நம்மூர் மொழியில் சொல்வதானால் எமன் பாசக்கயிறை வீசிவிட்டால், உயிரை எடுக்காமல் விடமாட்டான்.
இந்த படத்தைப் பார்த்த பிறகு, வருங்காலங்களில் ஏதேனும் விபத்தில் தப்பினால், இந்த படம் நிச்சயமாய் நம் மனக்கண்ணில் வரும்.
திரைக்கதையும், காட்சி நகர்த்துகிற விதம் தான் இந்த படத்திற்கு மிகப் பெரிய பலம். அடிதடி, திகில் படம் பார்க்கிறவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.
****
Friday, December 5, 2008
பெட்ரோல் விலை குறைப்பும் இறக்க முடியாத விலைவாசியும்!
உலகச் சந்தையில் கச்சா பேரல் உயரும் பொழுதெல்லாம், இங்கு விலை ஏற்றியவர்கள் 47 டாலருக்கும் கீழாக குறைந்த பிறகும், குறைக்க மனது வர மறுக்கிறது. இது ஒரு பிரச்சனை. இதற்கு பின்னணியில் வேறு ஒரு பிரச்சனையும் எழுகிறது. இந்த நிலையற்ற தன்மையில் பாதிக்கப்படுவது பெரும்பான்மை மக்களே!
ஒரு உணவகத்தில் வழக்கமாக சாப்பிடுவேன். மூன்று மாதங்களுக்கு முன்பு வரை டீ-யின் விலை ரூ. 3. இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ. 4. இரண்டு நாள்களுக்கு முன்பு, ரூ. 5 என மாற்றிவிட்டார்கள். இதே நிலை தான், அந்த உணவகத்தில் உள்ள எல்லா வகைகளுக்கும்.
இந்த கடுமையான விலைவாசி உயர்வுக்கு பல காரணங்களில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வும் ஒரு காரணம்.
இப்பொழுது, விலை குறைந்திருக்கிறது. அதன் எதிரொலிப்பு விலைவாசி குறைய வேண்டுமல்லவா! குறையாது. மொத்தத்தில் அவஸ்தைபடுவது மக்கள் தான்.
இந்த வருட துவக்கத்தில் நான் வாங்கிய சம்பளத்தின் மதிப்பு இன்றைக்கு 30% குறைந்திருக்கிறது. பல்வேறு செலவுகளை குறைத்து தான் சென்னையில் வாழமுடிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு ஜனவரியில் தான் இருக்கும். நிலவுகிற பொருளாதார மந்த நிலையில் எல்லா முதலாளிகளும் நெருக்கடியில் இருக்கிறார்களாம். இந்த ஆண்டு சம்பள உயர்வு கிடையாது என இப்பொழுதே அறிவித்து விட்டார்கள்.
வேறு அலுவலகத்திற்கு நகரலாம் என்றால், பல அலுவலங்களிலிருந்து பல்வேறு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவதாக பழக்கத்தில் H.R. கள் தெரிவிக்கிறார்கள். இப்பொழுது உள்ள சூழ்நிலையில், இருக்கிற வேலையை காப்பாற்றிகொள்வது தான் புத்திசாலித்தனம் எனவும் ஆலோசனை சொல்கிறார்கள்.
முதலாளிகளின் நெருக்கடி தொழிலாளிகளுக்கு நேரடியாக இறங்குகிறது. ஆனால், என்றைக்கும் தொழிலாளர்களின் நெருக்கடி முதலாளிகளை பாதிப்பதேயில்லை.
Monday, December 1, 2008
மழையால் நகரம் நரகமானது
வீட்டிற்குள் தண்ணிர் வராத, மாதத்திற்கு தேவையான மொத்த பொருட்களையும் வாங்கி வைத்திருக்கிற குடும்பங்கள் தப்பித்துவிட்டன. எல்லா மழையிலும் ஏழைகள் தான் நிறைய பாதிக்கப்படுகிறார்கள். அன்றாடம் வேலை செய்து, அதில் அரிசி, பருப்பு வாங்கி சமைத்து சாப்பிடுகிற குடும்பங்களின் நிலை கையறுநிலை தான்.
மின்சாரம் இல்லை. அத்தியாவசிய பொருட்கள் கூட நிறைய தட்டுப்பாடாகிவிட்டது. பால் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் சில பகுதிகளில் அரை லிட்டர் பால் 20 ரூபாயாம். எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரைக்கும் லாபம்.
ஏற்கனவே அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தால் வேலையிழப்பு, விலைவாசி உயர்வு, வாடகை உயர்வு என சிக்கித் தவித்த மக்கள் தான் சிறுக சிறுக சேமித்த கொஞ்ச பொருட்களையும் இந்த மழை கொண்டு போய்விட்டது.
எல்லாவற்றையும் இழந்து தலைவிரி கோலமாய் நிற்கிற மக்களை பார்க்கும் பொழுது, காண சகிக்கவில்லை. துயரம் தான் பீறிட்டு எழுகிறது.
பிரச்சனைகள் வருவதற்கு முன் காப்பாற்றுகிற அரசு மக்கள் நலன் நாடு அரசு எனலாம். செத்தப் பிறகு போஸ்ட்மார்ட்டம் செய்ய வருகிற அரசை என்ன சொல்வது?
எல்லாவற்றையும் இழந்து நிற்கும் மக்களுக்கு, அரசு 10 கிலோ அரிசியும், ரூ. 2000 பணம் என அறிவித்து இருக்கிறது. மழையில் அல்லாடுகிற மக்களை காப்பாற்ற வக்கற்ற அரசு, இந்த இழப்பீட்டு பணத்தை அமுக்க எத்தனை பிரயத்தனப்படுகிறார்கள் என இனி பார்க்கத்தான் போகிறோம்.
நகரம் வளர்ச்சியடைவதாக சொல்கிறார்கள். வேதனை கலந்த சிரிப்பு தான் வருகிறது. உடலில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் சரியாக ஊட்டம் போய் சேர்ந்தால் அது ஆரோக்கியம். ஒரு இடத்தில் குவிந்தால் அது வளர்ச்சி இல்லை. வீக்கம் . உடனடியாக மருந்து கொடுத்து குணப்படுத்த வேண்டிய நோய். இந்த நோயை குணப்படுத்தாமல், பெரும்பான்மை மக்களுடைய துயர மழை நிற்க போவதேயில்லை.
Thursday, October 16, 2008
பேச்சிலர் சமையல் - அத்தியாயம் 2
முதலில் சமையல் செய்வதற்கு நேரம் நிறைய முக்கியம்.
சென்னையில் அமைதியான சூழ்நிலை, சுத்தமான காற்று எல்லாம் கிடைப்பது அதிகாலையில் தான். அதை அனுபவிக்காதவர்கள் அவர்களின் ஆயுளில் 5 ஆண்டைநிச்சயமாய் கழித்துவிடலாம்.
காலையில் விரைவாக எழ வேண்டும் என்பது எனக்கு பல நாள் ஆசை. நண்பர் ஒருவர் இதை வேறு சொல்லிவிட்டார் "இந்த உலகத்தில் நிறைய சாதனை செய்தவர்கள் அதிகாலையில் எழுந்தவர்களாம்". ஆசையை நிறைவேற்றவதற்கு பெரிய போராட்டமாக இருந்தது. மேலே உங்களுக்கு சொன்ன ஆலோசனைகளைசெய்தால் கூட விரைவாக எழ முடியாத பிரச்சனை வந்தது.
அலார்ம் வைத்து தூங்கினால், நாம் சோம்பல் பட்டு எழுவதற்குள் அறையில் உள்ள எவராவது அதை அணைத்துவிடுவார்கள்.
நான் செய்தது எல்லாம்
Monday, October 13, 2008
ஹெல்மெட் அணியுங்கள். இல்லையெனில் உங்கள் உயிர் போலீசால் பறிக்கப்படும்!
மதுரையில் மூன்று நாள்களுக்கு முன்பு, ஒரு கொலை. பத்திரிக்கைகளில் விபத்து என செய்தி வெளியிட்டிருந்தார்கள்.
சுரேஷ்குமார், வயது 32. மதுரையில் பில்ட்ரான் என்ற நிறுவனத்தில் கலெக்சன் வசூலிக்கும் பணிபுரிகிறவர். அன்றைக்கு மதுரையிலிருந்து கிளம்பி திருப்பரங்குன்றம் வரை கிளம்பியவர், ஹெல்மெட் அணியாமல் போயிருக்கிறார். போகும் வழியில் ஒரு செக்போஸ்டில் முருகன் என்றொரு போலீஸ்காரர் வழிநிறுத்தியிருக்கிறார்.
நன்றி - தினமலர்
Wednesday, October 8, 2008
இறப்புச் சடங்கில் கலந்து கொண்ட நொந்த அனுபவம்!
சமீபத்தில் கூட ஒரு சென்னையின் புறநகரில் ஒரு வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்து, கொள்ளையடித்து போய்விட்டார்கள். அடுத்த நாள் வரை யாரும் பார்க்க்வில்லை எனசெய்திகள் படித்தோம்.
Tuesday, October 7, 2008
மாண்புமிகு முதல்வர் அவர்களே!
மின்சார வெட்டு விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஏனென்றால், சமீபத்தில் நமது மின்சார துறை அமைச்சர் வீராசாமி அடுத்த தேர்தலில் ஜெயிக்க முடியாது போனால், அதற்குமின்சார வெட்டுதான் முக்கிய காரணமாக இருக்கும்" என்கிறார்.
Saturday, October 4, 2008
பேச்சிலர் சமையல்!
Monday, September 29, 2008
மொக்கை, கும்மி என்றால்?
முன்குறிப்பு : என்னைப் பார்த்து, வலையுலகிற்கு புதியவரான ஈஸ்வரன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம். என்னால் இயன்றவரை பதில் சொல்ல முயன்றிருக்கிறேன். எனக்கு அதில் பெரிய அனுபவம் இல்லை.
சும்மா மாதிரி. அதற்கு பல அர்த்தங்கள் உண்டு.
நான் அறிந்த வரை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.
Saturday, September 27, 2008
மொக்கை, கும்மி பின்னூட்டங்கள் - ஒரு கலகலப்பான விமர்சனம் (!)
ஒரு நடுத்தர வர்க்கம் சார்ந்த ஒரு இளைஞன் தன் வாழ்வின் பாதையில் கவனமாய் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு ரவுடி குறுக்கிடுகிறான். அவனோடு மற்ற கதாநாயகன்மாதிரி நேருக்கு நேர் மோதாமல், வீர வசனம் பேசாமல் புலம்பிக்கொண்டே ஒதுங்கி போகிறார்.
இந்த வசனத்தில் உள்ள கருத்தின் மூலம் தான், நடுத்தர வர்க்கம் தன் காரியவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் மறைத்துக் கொள்கின்றன. இவை எப்படி வெளிப்படுகிறது என்றால்...மற்ற வர்க்கங்கள் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கும் பொழுது, தன் பிள்ளை அமெரிக்காவிலும், லண்டனிலும் செட்டிலாவதைப் பற்றி மட்டும் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் கவலைப்படுகிறது. ஆனால், தனக்கு ஒரு சின்ன பிரச்சனையென்றாலும், உலகமே தட்டிக் கேட்க வேண்டும் என்று குதிக்கும்.
Sunday, September 14, 2008
மேலே சட்டை, துண்டு! கீழே பேண்ட்டா?
நேற்று ஒருவர் "அவர்கள் வேட்டி கட்டாமல், கீழே பேண்ட் போட்டிருப்பார்கள்" என உறுதியாய் சொன்னார்.
அதை மேலும், உறுதி செய்யத்தான் இந்த பதிவு. மக்களே இது உண்மையா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
பின்குறிப்பு: அப்படியே, கீழே பேண்ட் போட்டிருந்தாலும், அது பெரிய குற்றமில்லை. ஒரு தகவலுக்காக கேட்கிறேன்
Monday, September 8, 2008
1ரூ அரிசி! அரசு போடும் பிச்சை!
தமிழகத்தில் ரேசன் கடையில் ஏற்கனவே 2ரூபாய்க்கு அரிசி என அறிவித்த பிறகு, இன்றைக்கு வரைக்கும் தொடர்ச்சியாக அரிசி கடத்தல் என செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
இப்பொழுது, அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி, கிலோ 1 ரூபாய்க்கு அரிசி என அறிவித்து இருக்கிறார்கள். அண்ணாவின் மிகப்பெரிய கனவுத்திட்டமாம். சந்தோசம்.
தென் தமிழகத்தில் மதுரையில் என் நண்பன் ஒருவன் ஒரு எடை போடும் மிசினில் வேலை பார்த்தார். ரேசன் கடை அரிசி எடை போட லாரி வரும் பொழுது, சோதனை செய்ய ஒரு அதிகாரியும் உடன் வருவாராம். அந்த பகுதியில் ஒரு அரிசி அரவை மில்லைச் சேர்ந்த ஒருவர் ஒரு கவரில் பணத்தை கொண்டு வந்து, தந்து விட்டு போவாராம். எதுக்காக? அரசு தருகிற அரிசி அவருடைய அரவை மில்லுக்கு போகும். அரவை மில்லிலிருந்து வேறு அரிசி ரேசன் கடைக்கு போகுமாம். இந்த திட்டத்தின் லட்சணம் இது தான்.
தினத்தந்தியில், அடித்தட்டு மக்களிடம் இந்த அரிசித் திட்டத்தைப் பற்றி கருத்துகள் கேட்கும் பொழுது, கடையில் முன்பு 15க்கு விற்ற அரிசி எல்லாம், இப்பொழுது 25க்கு விற்கிறது. வாங்கி சாப்பிட முடியவில்லை என்கிறார் ஒருவர்.
இன்னொருவர், ஏற்கனவே 2ரூ. அரிசியால் இரண்டு வேளை சாப்பிட்டோம். இனி மூன்று வேளை வயிறார சாப்பிடுவோம் என்கிறார் இன்னொரு பொதுஜனம்.
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களை சீராட்டி, பாராட்டி வளர்த்து, சிறு தொழில்களை அழித்ததின் மூலம் பல கோடி மக்களை பிச்சைகாரர்களாக மாற்றிவிட்டது இந்த அரசு.
1ரூ அரிசி என்பது, கருணாநிதி என்னும் மன்னன் தன் குடிமக்களின் வறிய நிலை கருதி, போட்ட பிச்சையாக இருக்கிறது.
இன்னும் எத்தனை காலம் தான் இதையெல்லாம் பொறுப்பது?
*****
இனி வருவது, முன்பு எழுதியது.
******
தமிழகத்தில் தி.மு.க அரசு கிலோ இரண்டு ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும் வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.
இப்பொழுது, ஆந்திராவில் ஆளும் காங்கிரசு கட்சியும் கிலோ 2.50 க்கு அரிசி வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது.
கர்நாடக காங்கிரசு கட்சியும், தமிழகம் போலவே.. தேர்தல் வாக்குறுதியாக, கிலோ 2 ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் தருவதாக அறிவித்து இருக்கிறது.
அந்த இரண்டு ரூபாய் அரிசியை கடந்த வாரம் வேலை தேடிக் கொண்டு இருக்கும், ஒரு நண்பரின் அறையில் சாப்பிட்டேன். அப்படி ஒரு கெட்ட வாடை. ' தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டியது தானே' என்றேன். நான்கு முறை கழுவியதாக கூறினான். அதிர்ச்சியாய் இருந்தது.இந்த அரிசியை தான் கேரளாவுக்கு கடத்துவதாக அடிக்கடி பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில மூட்டைகளோடு ஆந்திராவுக்கு ரயில் ஏற தயாராக நின்றிருந்த ஒரு வயதான அம்மாவை பிடித்து, சோதனை செய்யும் பொழுது, அது நம்ம ரேசன் அரிசி.
இப்படி இந்த அரிசிக்காகத் தான் இத்தனை களேபரம் என்றால், நாடு வளர்ச்சி விகிதத்தில் செல்கிறது என சொல்கிற நம்முடைய பொருளாதார புலிகள் மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் காகிதப்புலிகள் தானா?
சென்னையில், இரவில் குடிப்போதையில் அல்லது கன்ட்ரோல் இல்லாமல் எந்த வண்டியாவது நிலை தடுமாறினால், அன்றைக்கு மூன்று முதல் 5 மக்கள் செத்துப்போகிறார்கள். செய்தி தாள்களில் பார்க்கிறோம். இருக்க வீடு இல்லை.
தமிழக கிராமங்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன. காரணம் விவசாயம் நொடித்துப் போய், சிலர் வெளிநாடு நகர்ந்து விட்டார்கள். பலர் நகர்ப்புறம் நகர்ந்துவிட்டார்கள். செய்ய வேலை இல்லை.
இப்படி, மக்களுடைய வண்ண மயமான வாழ்க்கையை சோகமயமாய் கருப்பு வெள்ளையாய் மாற்றிவிட்டு, வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் கொடுப்பவர்களை என்ன சொல்வது? வக்கிரப்புத்திகாரர்கள் எனலாமா?இல்லையெனில்...என்ன சொல்ல வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!
Monday, August 25, 2008
போட்டாவில் சிக்கிய போலீஸ்
Thursday, August 14, 2008
'ஜன கன மன' - கவிதை
என்னுடன் போட்டி போட்டு
படித்த தனம்
டீ கடையில்
கிளாஸ் கழுவுகிறான்
முத்து முத்தாய் எழுதும்
முத்துராசு
கணக்கு பாடத்தில்
100க்கு 100 வாங்கும்
கருப்பு சந்தானம்
வெல்டிங் பட்டறையில்
கொஞ்சம் கண் அயர்ந்ததில்
செத்துப் போனான்
இருப்பினும்...
நெஞ்சு நிமிர்த்தி பாடலாம்
'ஜன கன மன'
பின்குறிப்பு : அக்கா பெண் 9ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளியில் ஆண்டுவிழாவிற்காக கவிதை கேட்கிறார்கள். எழுதி தாருங்கள் என்றாள்.
'நீயே எழுதுவது தான் சரி.எழுதி கொண்டு வா! திருத்துகிறேன்' என்றேன்
ஒன்றும் எடுபடவில்லை. அடம்பிடித்து எழுதி வாங்கிப் போனாள். கவிதை நன்றாக இருந்ததாக பாராட்டி, பள்ளி இதழில் வெளியானது.
கவிதையில் வரும் பாத்திரங்கள் நிஜமானவர்கள். இரவில் என்னுடன் பேசி போன ஒரு மணி நேரத்தில் செத்துப்போனான். அடுத்த நாள் அதிகாலையில் மார்ச்சுவரியில் பார்த்த சந்தானத்தின் உடலை நினைத்தால், இன்றைக்கும் என்உடல் புல்லரிக்கும். நெஞ்சு கணத்துவிடும். இறக்கும் பொழுது அவனுக்கு வயது 15.
Saturday, August 9, 2008
இனி அடிக்கடி எழுதுவேன் - நொந்தகுமாரன்
Wednesday, August 6, 2008
ஹெல்மெட் - சில குறிப்புகள்!
Friday, May 2, 2008
சாத்தான் வேதம் ஓதுகிறது!
மெத்தனால்
கடைசி வரை கொல்லுகின்ற
கள்ளச்சாராயம்
கொடிய விஷத்தன்மை கொண்ட
போலி மதுபானம்
இவற்றைக் குடிப்பதால் வரும் கேடுகள்:
1. கண்பார்வை, உயிர் பறிபோகும்
2. நல்ல குடும்பம் நடுத்தெருவிற்கு வரும்
3. மானம் மரியாதை அடியோடு போகும்
4. உறவும், நட்பும் ஒதுங்கிச் செல்லும்
5. குடும்பத்தை அழித்து குப்பை மேடாக்கும்
உணருங்கள்! திருந்துங்கள்!!
கள்ளச்சாராயம், போலி மதுபானம் காய்ச்சாமல்,
குடிக்காமல் உயந்தவராக வாழுங்கள்
சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை
இந்த நாட்டு குடிமக்களுக்கு..
* தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான தனியார் கல்லூரிகள்.
மேலும், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்திருக்கின்றனவாம். விரைவில் அரசு அனுமதி தர தயாராய் இருக்கிறது.
மக்களுக்கு கல்வி கொடுக்கும் பொறுப்பில்லை. தனியார் கல்லூரிகள் தரமான கல்வி தரும். அரசு நம்புகிறது.
* நல்ல குடிநீருக்காக 20 லிட்டர் தண்ணீர், ரூ. 20 க்கு மக்கள் வாங்கி குடிக்கின்றனர்.
குறைந்தபட்சம், மக்களுக்கு தரமான குடிநீர் கொடுக்க பொறுப்பில்லை. தனியார் தரமான குடிநீர் தருவார்கள். அரசு நம்புகிறது.
* ஆனால், இந்த அரசுகள் தனது குடிமக்களின் நலன் கருதி, தனியாரிடமிருந்து புடுங்கி, கண்ணும் கருத்துமாய் தரமான சாராயம் தயாரித்து, அலைச்சலின்றி வாங்க தெருவுக்கு ஒரு டாஸ்மார்க் கடை திறந்து, இரவு 11 மணி வரைக்கும் பொறுப்பாக சப்ளை செய்கிறது.
எனக்கு ஒண்ணு மட்டும் புரியலைங்க!
அரசு விற்கிற சாராயத்தை குடிச்சா
உசிரு போகாதா!
குடும்பம் தெருவுக்கு வராதா!
மான, மரியாதை போகாதா!
மக்களே!
நீங்க தான் எனக்கு இதை விளக்கனும்!
Wednesday, April 30, 2008
மே தினம் - சில கேள்விகள்
பிளாக்கில், பலரை போல மொக்கையாய் ஏதும் போடாமல், உருப்படியாய் எதாவது எழுதலாம் என யோசித்ததில்....
மே தினம் பற்றி என அலுவலக நண்பர்களிடம் கேட்டால், ஒருத்தருக்கும் உருப்படியாக ஒன்றும் தெரியவில்லை.
பிறகு, கொஞ்சம் தமிழ் விக்கிபீடியாவில் தேடியதில், சில தகவல்கள் சேகரித்தேன். சில கேள்விகளும் எழுந்தது.
18ம் நூற்றாண்டுகளில் வளர்ந்த நாடுகளில், தொழிற்சாலைகளில் குழந்தைகள், பெண்கள் உட்பட எல்லா தொழிலாளர்களும் 12 மணி நேரம், 18 மணி நேரம் வேலை செய்ய மிரட்டப்பட்டு இருக்கிறார்கள்.
இங்கிலாந்தில், சாசன இயக்கம் என்ற தொழிலாளர் இயக்கம் 10 மணி நேரம் வேலை என்ற கோரிக்கை உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வைத்து போராட துவங்கி இருக்கிறது.
அதற்குப் பிறகு, உலகம் முழுவதிலும் தொழிலாளர் இயக்கங்கள் குறிப்பாக கம்யூனிச இயக்கங்கள் 8 மணி நேரம் வேலைக்காக தொடர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள்.
பல இலட்சகணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். போராட்டங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல தொழிற்சங்க தலைவர்கள் தூக்கில் போடப்பட்டிருக்கிறார்கள்.
தொடர் போரட்டத்தின் வழியே, 1889 ஆண்டில் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக கடைப்பிடிக்க வழிவகுத்தது.
................. இதெல்லாம் வரலாறு.
என் கேள்வி என்னவென்றால்...
8 மணி நேரம் வேலைக்காக 150 ஆண்டுகளுக்கு முன்பு போராடியிருக்கிறார்கள்.
அதற்கு பிறகு எல்லா நாடுகளும் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடுகளாக மாறியிருக்கின்றன.
பொருளுற்பத்தியில் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்த பல நவீன அறிவியல் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தி வருகின்றன.
மக்கள் தொகை பத்து மடங்காக பெருகியிருக்கிறது.
அப்படியானால், இப்பொழுது வேலை செய்கிற நேரம் 8 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைந்திருக்க வேண்டுமல்லவா!
மாறாக, 8 மணி நேரத்திலிருந்து... 12 மணி நேரம், 14 மணி நேரமாக கூடியிருக்கிறதே! இது ஏன்?
இது பற்றி, ஒரு நண்பரிடம் கேட்டதற்கு,
"எப்பொழுதுமே, ஒரு மக்கள் கூட்டம் வேலை இல்லாமல் இருந்தால் தான், முதலாளிகளுக்கு குறைவான கூலிக்கு ஆள் கிடைக்கும். எல்லா அரசுகளும் முதலாளிகளுக்கு ஆதரவாக இதை கவனமாக பார்த்து கொள்கிறது" என்றார்.
நம் நாட்டில் 5 டிஜிட், 6 டிஜிட் சம்பளம் வாங்கும், கணிப்பொறி வல்லுநர்கள் பாவம். மற்ற தொழிலாளர்களை விட நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். சம்பளம் அதிகம். உரிமைகள் குறைவு. சின்ன சின்ன விசயங்களுக்காகவே, அல்லது காரணம் என்னவென்று அறியாமலேயே வேலையை விட்டு தூக்கி விடுகிறார்களாம்.
ஆதலால், என் நண்பர் சொன்ன கருத்து எனக்கு சரியெனப்படுகிறது. உங்களுக்கு!
Tuesday, April 29, 2008
Friday, April 25, 2008
அழகிய யுவதிகள்
Sunday, April 20, 2008
"ஓ" வென அழுதுவிடுகிறேன்!
ஒரு உடலாவது
வாரம் ஒருமுறை கண்ணில்படுகிறது
முதலாளிக்கு பயந்து - ஓடி
தண்டவாளம் கடக்கும் மனிதர்களை - தினம்
பயத்துடன் பார்க்கிறேன்.
தொடரும் பயணங்களில்
மனம் மரத்துப் போய் - பார்க்க
பழகிகொண்டது.
இருப்பினும்
மோதி தெறித்து விழும்
சிதைந்த உடலிருந்து - நகைகளை
அறுத்து ஓடுகிற மனிதர்களை
கண்டால் தான்
மனம் பொறுக்காமல்
"ஓ"வென அழுதுவிடுகிறேன்.
* சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் ரயிலில் அடிபட்டு ஏழு ரயில்வே ஊழியர்கள் உட்பட 90 பேர் பலி.
தற்கொலைகள், தண்டவாளம் கடக்கிறவர்கள், வேலை செய்கிற ரயில்வே ஊழியர்கள் என கடந்த மூன்று மாதத்தில் சென்ட்ரல் - கும்முடிபூண்டி-ஆவடி பாதையில் 60 பேர்களும், சென்ட்ரல் செங்கல்பட்டு பாதையில் 30 பேர்களுமாய் 90 பேர்கள் பலி.
இதில் வேதனை என்னவென்றால் போலீசார் சம்பவ இடம் போகும் முன்னரே சிலர் இறந்துகிடக்கும் உடல்களில் இருந்து பணத்தையும், நகைகளையும் முதலிலேயே எடுத்துவிடுவதாக கூறப்படுகிறது.
- தினத்தந்தி - 20.04.2008 பக். 19 லிருந்து.
Friday, April 18, 2008
நகரவாசி - கவிதை
Thursday, April 17, 2008
கருப்பு வெள்ளை வாழ்க்கையும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியும்!
இப்பொழுது, ஆந்திராவில் ஆளும் காங்கிரசு கட்சியும் கிலோ 2.50 க்கு அரிசி வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது.
கர்நாடக காங்கிரசு கட்சியும், தமிழகம் போலவே.. தேர்தல் வாக்குறுதியாக, கிலோ 2 ரூபாய்க்கு அரிசியும், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும் தருவதாக அறிவித்து இருக்கிறது.
அந்த இரண்டு ரூபாய் அரிசியை கடந்த வாரம் வேலை தேடிக் கொண்டு இருக்கும், ஒரு நண்பரின் அறையில் சாப்பிட்டேன். அப்படி ஒரு கெட்ட வாடை. ' தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டியது தானே' என்றேன். நான்கு முறை கழுவியதாக கூறினான். அதிர்ச்சியாய் இருந்தது.
இந்த அரிசியை தான் கேரளாவுக்கு கடத்துவதாக அடிக்கடி பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சில மூட்டைகளோடு ஆந்திராவுக்கு ரயில் ஏற தயாராக நின்றிருந்த ஒரு வயதான அம்மாவை பிடித்து, சோதனை செய்யும் பொழுது, அது நம்ம ரேசன் அரிசி.
இப்படி இந்த அரிசிக்காகத் தான் இத்தனை களேபரம் என்றால், நாடு வளர்ச்சி விகிதத்தில் செல்கிறது என சொல்கிற நம்முடைய பொருளாதார புலிகள் மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் காகிதப்புலிகள் தானா?
சென்னையில், இரவில் குடிப்போதையில் அல்லது கன்ட்ரோல் இல்லாமல் எந்த வண்டியாவது நிலை தடுமாறினால், அன்றைக்கு மூன்று முதல் 5 மக்கள் செத்துப்போகிறார்கள். செய்தி தாள்களில் பார்க்கிறோம். இருக்க வீடு இல்லை.
தமிழக கிராமங்கள் எல்லாம் வெறிச்சோடி கிடக்கின்றன. காரணம் விவசாயம் நொடித்துப் போய், சிலர் வெளிநாடு நகர்ந்து விட்டார்கள். பலர் நகர்ப்புறம் நகர்ந்துவிட்டார்கள். செய்ய வேலை இல்லை.
இல்லையெனில்...
என்ன சொல்ல வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!
Wednesday, April 16, 2008
காருக்கு ஒரு நீதி: பைக்குக்கு ஒரு நீதியா?
இப்பொழுதெல்லாம், வேறு ஏதும் சோதனை செய்வதில்லை. ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க எளிதாக இருப்பதால், தெருவுக்கு தெரு நின்று காவல்துறையினர் சிக்கியவரை ரூ. 50, ரூ. 100 என கல்லா கட்டுகிறார்கள்.
லஞ்சம் பெருகியுள்ள நாட்டில் மக்கள் நலன் காக்க போடுகிற சட்டங்கள், அந்த மக்களுக்கு எதிராகத்தான் வேலை செய்யும் என்பது நிதர்சனம்.
தென்மாவட்டங்களில் ஹெல்மெட்டெல்லாம் ஒருவரும் அணிவதில்லை. காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லையாம். நண்பர்கள் சொன்னார்கள்.
டிராபிக் இராமசாமி சென்னையில் மட்டும் இருப்பது தான் காரணமாக இருக்கலாம்.
இந்த செய்தியை எல்லோரும் தெரிந்திருப்பார்கள். நான் சொல்ல வந்த செய்தி வேறு.
கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு பிறகு, கார்களில் கிரிமினல் குற்றங்கள் நிறைய நடப்பதால், 'சன் கண்ட்ரோல் பிலிம்' ஒட்டக்கூடாது என்றொரு சட்டம் போட்டார்கள்.
அதற்கு பிறகு தொடர்ச்சியாய் கவனிக்கிறேன். பல கார்களில் பிலிம் ஒட்டப்பட்டு சுதந்திரமாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.
நான் கவனித்த வரையில், பைக்கை தெருவுக்கு தெரு நிறுத்தி, கல்லா கட்டுபவர்கள் ஏன் காரை நிறுத்தி கல்லா கட்டுவதில்லை.
இதனால், எனக்கு சில சந்தேகங்கள் வருகின்றன
1. இந்த சட்டம் வாபஸ் ஆகிவிட்டதா? அல்லது
2. திருட்டு சி.டி விற்பவர்கள், டாஸ்மார்க் பார் நடத்துபவர்கள், கஞ்சாவிற்பவர்கள் மாதந்தோறும் அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு மாதம் மாதம் மாமூல் கொடுப்பது மாதிரி, கார்களை வைத்து கிரிமினல் தொழில் செய்பவர்கள் மாமூல் கொடுக்கிறார்களா? அல்லது
3. கார் வைத்திருப்பவர்கள் சமூகத்தில் பெரிய மனிதர்கள். அவர்கள் என்னதான் தவறு செய்தாலும், மதிப்புடன் நடத்தவேண்டும் என நினைக்கிறதா?
உங்களுக்கும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்
Sunday, April 13, 2008
அன்பான வலையுலக பெருமக்களே!
கடந்த நான்கு மாதங்களாக சில சொந்த கவலைகள், புதிதாக வேலைக்கு சேர்ந்ததினால் சில புதிய வாழ்க்கை மாறுதல்கள் என வாழ்க்கை சுழற்றியடித்து, பின்பு சுதாரித்து திரும்பிப் பார்த்தால் நான்கு மாதங்கள் ஓடிவிட்டன.
கடந்த நான்கு மாதங்களாக பதிவர்களையும், அவர்கள் இடும் பதிவுகளையும் உன்னிப்பாய்(!) கவனித்ததில், மொக்கைப் போடுவர்கள் இன்னும் மோசமான மொக்கைப்போடுகிறவர்களாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
அனானிகள் புதிய மாற்றம் பெற்றிருக்கிறார்கள். தன் பெயரைச் சொல்ல முடியாத பயந்தாங்கொள்ளி அனானி, என் பெயரைப் பயன்படுத்தி, உண்மைத்தமிழன் அவர்களை நக்கல் செய்திருக்கிறான்.
பதிவுலகை விட்டு, நான்கு மாதம் வனவாசம் போனது, எனக்கு பயனாகத்தான் இருந்திருக்கிறது.
இனி, தொடர்ச்சியாய் எழுதலாம் என நினைத்திருக்கிறேன். காரணம் - பலரும் உருப்படியாய் ஒன்றும் எழுதாத பொழுது, நாம் ஏன் எழுதக்கூடாது என என் மனசாட்சி கேட்கிறது.
இனி அடிக்கடி வருவேன்.