
முன்குறிப்பு : அறிவாளிகள் சிலர், தன் எழுத்தால், சிந்தனையால் நோகடிக்கிறார்கள் என சில காலம் வலையுலகத்தை விட்டு விலகியிருந்தேன்.
இந்த காலத்தில், இளமையில் எல்லோரையும் பிடித்து ஆட்டும் காதல், என்னையும் பிடித்துவிட்டது. நோகடிக்கிற காதலை, காதலியைப் பற்றி, நோகடிப்பதில் சீனியர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பிரிய தோழிக்கு,
உன்மீது எவ்வளவு நேசம்?
வினா எழுப்பியிருந்தால்
முன்பு
பதில் உரைத்து இருப்பேன்.
எனக்குள் நானே - மறுபடியும்
வினா எழுப்பிப் பார்க்கிறேன்.
மிரண்டு போகிறேன்.
நான் நினைத்திருந்த
எல்லையெல்லாம்
என்றைக்கோ
கடந்து இருக்கிறாய்
உன் வயதில், வடிவில்
கடக்கின்ற
ஒவ்வொரு பெண்ணும்
நீயாக தெரிகிறாய்
பிரமை தான்!
உணர்ந்தும்
தேடிப்பார்க்கிறேன்
உன்முகம்.
உன் கண்களை
சந்தித்த நாள் முதல்
இன்றைய வரைக்கும்
என் நாட்குறிப்பின்
பக்கங்களிளெல்லாம்
உன்னைப் பற்றியே.
அல்லது
என்னில் இருக்கும்
உன்னைப் பற்றியே.
காதலைப் பற்றிய
சுய மதிப்பீடுகள் எல்லாம்
என் கண் முன்னே
சரிந்து விழுகின்றன
எப்பொழுதும்
நான் பயப்படுவதெல்லாம்
என் பலவீனங்கள் கண்டு.
உன் மீதான ஆழமான நேசம்
என் பலவீனங்களில்
ஒன்றாய் மாறிப்போகுமோ
எண்ணம் எழுகிறது
இறுதியாய்...
உன்னிடம் வேண்டுவன எல்லாம்...
தொலைதூரம்
நான் பயணப்பட வேண்டும்
கடமை அழைக்கிறது
என் சிறகுகளை
என்னையறியாமல்
உன்னிடம் தந்துவிட்டேன்
சிறகுகளை தந்துவிடு!
அல்லது
சிறகாய் நீயே மாறிவிடு!
இந்த காலத்தில், இளமையில் எல்லோரையும் பிடித்து ஆட்டும் காதல், என்னையும் பிடித்துவிட்டது. நோகடிக்கிற காதலை, காதலியைப் பற்றி, நோகடிப்பதில் சீனியர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பிரிய தோழிக்கு,
உன்மீது எவ்வளவு நேசம்?
வினா எழுப்பியிருந்தால்
முன்பு
பதில் உரைத்து இருப்பேன்.
எனக்குள் நானே - மறுபடியும்
வினா எழுப்பிப் பார்க்கிறேன்.
மிரண்டு போகிறேன்.
நான் நினைத்திருந்த
எல்லையெல்லாம்
என்றைக்கோ
கடந்து இருக்கிறாய்
உன் வயதில், வடிவில்
கடக்கின்ற
ஒவ்வொரு பெண்ணும்
நீயாக தெரிகிறாய்
பிரமை தான்!
உணர்ந்தும்
தேடிப்பார்க்கிறேன்
உன்முகம்.
உன் கண்களை
சந்தித்த நாள் முதல்
இன்றைய வரைக்கும்
என் நாட்குறிப்பின்
பக்கங்களிளெல்லாம்
உன்னைப் பற்றியே.
அல்லது
என்னில் இருக்கும்
உன்னைப் பற்றியே.
காதலைப் பற்றிய
சுய மதிப்பீடுகள் எல்லாம்
என் கண் முன்னே
சரிந்து விழுகின்றன
எப்பொழுதும்
நான் பயப்படுவதெல்லாம்
என் பலவீனங்கள் கண்டு.
உன் மீதான ஆழமான நேசம்
என் பலவீனங்களில்
ஒன்றாய் மாறிப்போகுமோ
எண்ணம் எழுகிறது
இறுதியாய்...
உன்னிடம் வேண்டுவன எல்லாம்...
தொலைதூரம்
நான் பயணப்பட வேண்டும்
கடமை அழைக்கிறது
என் சிறகுகளை
என்னையறியாமல்
உன்னிடம் தந்துவிட்டேன்
சிறகுகளை தந்துவிடு!
அல்லது
சிறகாய் நீயே மாறிவிடு!