Saturday, August 9, 2008

இனி அடிக்கடி எழுதுவேன் - நொந்தகுமாரன்






முன்குறிப்பு : அதிக வேலை காரணமாக சில காலம் வலையுலகில் இருந்து விலகியிருந்தேன். வலையுலகில் இன்னமும் கும்மியும், ஜல்லியும் குறைந்தபாடில்லை. இனி அடிக்கடி வலம் வருவேன்.
"எழுத சொல்லி பல பதிவர்கள் நிறைய பின்னூட்டமிடுகிறார்கள். பதிவுலக நண்பர்கள் அன்பு தொல்லை செய்கிறார்கள்" இப்படியெல்லாம் புருடா விடமாட்டேன்.
இடைக்காலத்தில் நிறைய நொந்த அனுபவங்கள். எனக்கே ஆறுதலாய் இருக்கட்டுமே என்று தான் எழுதுகிறேன்.

இன்று சாலை கடக்கையில் ஒரு வாசகம் பார்த்தேன்.

சாலையில் செல்கையில்
செல்போன் பேசாதீர்.
அழைப்பது
எமனாக கூட இருக்கலாம்.

எப்பொழுதும் கட்டளைகளாக, அறிவுரைகளாக எழுதிருப்பார்கள். படித்ததும் பிடித்திருந்தது.

Wednesday, August 6, 2008

ஹெல்மெட் - சில குறிப்புகள்!



கவனிக்கவும் - திருவாளர் டிராபிக் ராமசாமி அவர்கள்
பல வண்டிகளில்
வண்டியின் உறுப்பாய்
லாக்கரில் துருப்பிடித்து
பரிதாபமாய் தொங்குகிறது.

வழுக்கைத்தலைகாரர்கள்
பெரும்பாலும் அணிவதில்லை
அவர்கள் விதிவிலக்கு
பெற்றிருக்கிறார்களா என்ன?

ஹெல்மெட் அணிவதால்
முடி கொட்டுவதாய்
நண்பன் புலம்புகிறான்
விசேஷ ஷாம்பூ
தயாரிக்கிறார்களா?

தெரிவியுங்கள்
நாலு செல்
ஆறு ஹெல்மெட்
மறந்து தொலைத்ததாய்
பட்டியல் தருகிறான்
ஹெல்மெட் அணிவதால்
மறதி அதிகமாகுமா?

ஹெல்மெட் சட்டம்
டிராபிக் போலீஸ்க்கு
அரசு மறைமுகமாய்
அறிவித்த போனஸ் அறிவிப்பா?
ரூ. 100 கொடுத்தால்
விட்டுவிடுகிறார்கள்.

தென்மாவட்டங்களில் - யாரும்
அணிவதேயில்லை
நண்பர்கள் சொன்னார்கள்.
டிராபிக் ராமசாமி
சென்னையில் மட்டும் இருப்பதலா?!