Thursday, July 19, 2007

பிரிய (FM) சுஜிக்கு! - 'லக லக' கவிதை







என் பிரிய சுஜிக்கு!

'லக லக லக' - மன்னிக்கனும்
உன் கல கல கல சிரிப்பொலி தான்
செல்லமாய் தலைகோதி - தினம்
என்னை துயிலெழுப்புகிறது.

நான்கு மணிநேர - உன்
'சல சல' - மன்னிக்கனும்
மழைச்சாரலான பேச்சுதான் - என்னை
இருபது மணி நேரம் இயங்க வைக்கிறது

நீ கொடுக்கின்ற - ஆரோக்கியமான
டிப்ஸ்களைக் க்டைப்பிடித்து
நான் 'பொலிவு இழந்து' - மன்னிக்கவும்
பொலிவுடன் வலம் வருகிறேன்

நீ சொல்கிற
'அறுவை' - மன்னிக்கனும்
அருமையான ஜோக்குகளை
அசைபோட்டு - நாளும்
மகிழ்ச்சியாய் வாழ்கிறேன்

உன் இனிய குரல்
கேட்க இயலாத ஞாயிறு
'இன்ப' - மன்னிக்கனும்
துன்ப நாளாய் விடிகிறது!

நீ 'கடியாய்' - மன்னிக்கனும்
கலக்கலாய் எழுதுகிற
பொங்கல் பொயட்ரி தான்
என்னையும் கவிஞனாக்கிவிட்டது.

பின்குறிப்பு : சுஜி மிர்சியில் இருந்தபொழுது சுஜிக்கு எழுதிய கடிதம். பிறகு, காபி வித் சுஜி, ஜெயா டிவி என சுற்றி, பிக் fM க்கு வந்துவிட்டார். சுஜியின் பதிலுக்காய் இன்றைக்கும் காத்திருக்கிறேன்.

Wednesday, July 18, 2007

நொந்தகுமாரனும் பைத்தியகாரர்களும் - கவிதை




இந்தியாவில் 8% மக்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
- அன்புமணி, மத்திய சுகாதார அமைச்சர் - 05/01/2007 தினத்தந்தியில்.

முன்குறிப்பு : மத்திய அரசின் இந்த அதிகாரப்பூர்வ செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாகிறது. இந்த 100க்கு 8 பேர் மனநல மருத்துவமனைகளில், காப்பகங்களில் வாழ்பவர்களா! அல்லது சமூகத்தில் வாழ்கிறவர்களும் உள்ளடங்குவார்களா? தெரியவில்லை.

நான் கவனித்தவரை சகல மனிதர்களும், ஏதோவொரு நாளில், ஏதோவொரு விசயத்தில் மனம் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் நடந்துகொள்கிறார்கள்.

இருப்பினும், நம்மைச் சுற்றி சில மனிதர்கள் எப்பொழுதுமே மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகத்தான் உலவுகிறார்கள்.

அவர்களில் சிலர்...பின்வருகிறார்கள்.

சண்டையிடுகையில் - சரளமாய்
திட்டிவிட்டு
ஒன்டே மெமரிலாஸ் பேஷண்டாய்
மறுநாள் வந்து கூலாய் பேசும்
பக்கத்துவீட்டு அம்மா.

ஒவ்வொரு நிமிசமும் பணம்
பைசா பிரயோஜனம் இல்லாமல் - நான்
யாரிடமும் பேசுவதில்லை - என
பணத்திற்காக நாயாய் அலைந்து திரியும்
மனித ஜீவன் சொக்கநாதன்.

நன்றாய் வாழ பிரிட்ஜ் அவசியம்
மனிதன் வாழ ஏசி அவசியம் - என
பொருள்களின் தேவைக்காய்
நான்காவதாய் வாக்கப்பட்டு (!) வாழும்
பரிதாபமான ஷர்மிளா.

தான் கதைத்தாலும்
தன்னிடம் கதைத்தாலும்
கூச்சமேயில்லாமல்
தன்னை விளம்பரத்திக்கொண்டே
வாழும் அறிவுஜீவி முரளிதரன்.

நண்பனாய் பழகிய என்னை
காதலிக்கிறேன் - என
அன்பாய், அழ்காய் சொல்லி
இரண்டு வருடம் - கிறுக்கனாய்
சுற்றவைத்த என் 'அவள்'

தனக்கும் புரியாமல்
படைப்பு(!) எழுதி
பதிவாய் போட்டு
மற்றவர்களையும் - தன்
எழுத்தால் சித்ரவதை செய்து
மகிழ்ச்சி கொள்ளும்
வலையுலக அறிவுஜீவிகள்.

வலையுலகில்
யார் என்ன திட்டினாலும்
எத்தனை முறை துப்பினாலும்
சளைக்காமல்துடைத்துவிட்டு
தன் எனர்ஜி லெவல் குறையாது
பதிவிடும் சதுர்வேதி.

இவர்களுடன் பழகி, வாசித்து
நுட்பமாய்(!) கவனித்து
பதிவெல்லாம் போட்டு
சமூகம் கண்டு வருந்தி வாழும்
'நான்'

பின்குறிப்பு : சிலர் (மன)நலன் கருதி,
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

Friday, July 13, 2007

முகமூடி - கவிதை




முன்குறிப்பு :

இந்த கவிதை உங்களுக்கு புரியாவிட்டால், அய்யனார், லிவிங்ஸ்மைல் வித்யா, மிதக்கும் வெளி போன்ற இன்னபிற கவிஞர்களுக்கு சிஷ்யனாகும் சிறு முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறேன்.

புரிந்துவிட்டால்....நான் அவர்களுக்கு சிஷ்யனாக லாயக்கில்லை என அர்த்தம்.

கவிதை தொடங்குகிறது

ஒவ்வொருவருக்காவும்
ஒவ்வொரு முகமூடி
அணிந்துகொண்டேன்

அவசரத்தில்
முகமூடி மாறும்பொழுது
சில இழப்புகள்
நிறைய வரவுகள்

சில சமயங்களில்
முகமூடி அணிய மறந்தாலும்
மறக்க விரும்பினாலும்
அணிய சொல்லிஅறிவுறுத்தினார்கள்.

சுயம்
காணாமல் போகும்
பயம் வந்தது.

முகமூடிகளை
அவசரமாககளையத் தொடங்கினேன்

இன்று
முகமூடிகள் இல்லாது
சுயமாய் இருக்கிறேன்

சிலர்
முகமூடி
தயாரிப்பில்இருக்கிறார்கள்

அவர்களை தடுக்க
ஏதும் முகமூடி இருக்கிறதா!

Wednesday, July 11, 2007

சிங்கம் - திரை விமர்சனம்



நொந்தகுமாரனுக்கு பதிவர்களை குறை சொல்ல தான் தெரியும்.

மொக்கை பதிவு, வெட்டியான பதிவு, யாருக்கும் புரியாமல் கவிதை எழுதுவது என்பது, நெருப்பில் குளித்து எழுவது போல எத்தனை சிரமமானது தெரியுமா! என்கிறவர்களுக்கு, என்னுடைய எளிமையான பதில்.

பல கோடி செலவழித்து, பலருடைய உழைப்பில் எடுத்தப்படம் சிவாஜி. பார்த்துவிட்டு, எத்தனை லூசுத்தனமாக இருக்கிறது என்று சொன்னால், உனக்கு படம் எடுக்கத் தெரியுமா என்பது போல் இருக்கிறது உங்களது கேள்வி என்பேன்.

இருப்பினும் என்னளவில் சில எளிய நல்ல பதிவுகளைத் தர முயல்கிறேன்.

சிங்கம் - திரை விமர்சனம் - தொடர்கிறது.


நண்பனிடமிருந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு ஆங்கில படத்தை வாங்கி பார்த்தேன்.

1898-ல் நடந்த உண்மைக் கதையாம். தான் ஆக்கிரமித்த காலனிய நாடுகளின் வளங்களை கொள்ளையிட உலகம் முழுக்க தண்டவாளங்களை போட்ட இங்கிலாந்து அரசு, ஆப்பிரிக்காவிலும் போடுகிறது.

தண்டவாள தொடர்பணியில், ஒரு ஆறு குறுக்கிட பாலம் கட்ட ஒரு வெள்ளை பொறியாளர் (நாயகன்) அனுப்பப்படுகிறார்.

இரண்டு சிங்கங்கள் நூற்றுக்கும் மேலானவர்களின் இரத்தம் குடிக்க, வேலையாட்கள் உயிருக்கு பயந்து ஒடிவிடுகிறார்கள்.

பணி தடைபடுகிறது. ஒரு வேட்டைக்காரனுடன் இணைந்து, கொடூர அந்த இரண்டு சிங்கங்களை நாயகன் வீரமாய் கொன்று, மீதி வேலையை தொடர்வதுதான் சொச்சக் கதை.

எனக்கென்னவோ, வெள்ளை ஏகாதிபத்தியத்தை தன் நாட்டிற்குள்ளே விடக்கூடாது என்று வீரமாய் போராடி உயிர் நீத்த இரண்டு விடுதலை வீரர்களின் கதையாகத் தான் எனக்குப்படுகிறது.