Wednesday, July 11, 2007

சிங்கம் - திரை விமர்சனம்



நொந்தகுமாரனுக்கு பதிவர்களை குறை சொல்ல தான் தெரியும்.

மொக்கை பதிவு, வெட்டியான பதிவு, யாருக்கும் புரியாமல் கவிதை எழுதுவது என்பது, நெருப்பில் குளித்து எழுவது போல எத்தனை சிரமமானது தெரியுமா! என்கிறவர்களுக்கு, என்னுடைய எளிமையான பதில்.

பல கோடி செலவழித்து, பலருடைய உழைப்பில் எடுத்தப்படம் சிவாஜி. பார்த்துவிட்டு, எத்தனை லூசுத்தனமாக இருக்கிறது என்று சொன்னால், உனக்கு படம் எடுக்கத் தெரியுமா என்பது போல் இருக்கிறது உங்களது கேள்வி என்பேன்.

இருப்பினும் என்னளவில் சில எளிய நல்ல பதிவுகளைத் தர முயல்கிறேன்.

சிங்கம் - திரை விமர்சனம் - தொடர்கிறது.


நண்பனிடமிருந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு ஆங்கில படத்தை வாங்கி பார்த்தேன்.

1898-ல் நடந்த உண்மைக் கதையாம். தான் ஆக்கிரமித்த காலனிய நாடுகளின் வளங்களை கொள்ளையிட உலகம் முழுக்க தண்டவாளங்களை போட்ட இங்கிலாந்து அரசு, ஆப்பிரிக்காவிலும் போடுகிறது.

தண்டவாள தொடர்பணியில், ஒரு ஆறு குறுக்கிட பாலம் கட்ட ஒரு வெள்ளை பொறியாளர் (நாயகன்) அனுப்பப்படுகிறார்.

இரண்டு சிங்கங்கள் நூற்றுக்கும் மேலானவர்களின் இரத்தம் குடிக்க, வேலையாட்கள் உயிருக்கு பயந்து ஒடிவிடுகிறார்கள்.

பணி தடைபடுகிறது. ஒரு வேட்டைக்காரனுடன் இணைந்து, கொடூர அந்த இரண்டு சிங்கங்களை நாயகன் வீரமாய் கொன்று, மீதி வேலையை தொடர்வதுதான் சொச்சக் கதை.

எனக்கென்னவோ, வெள்ளை ஏகாதிபத்தியத்தை தன் நாட்டிற்குள்ளே விடக்கூடாது என்று வீரமாய் போராடி உயிர் நீத்த இரண்டு விடுதலை வீரர்களின் கதையாகத் தான் எனக்குப்படுகிறது.

2 comments:

Anonymous said...

nalla pathivu..

Anonymous said...

good critic.