Saturday, August 9, 2008

இனி அடிக்கடி எழுதுவேன் - நொந்தகுமாரன்






முன்குறிப்பு : அதிக வேலை காரணமாக சில காலம் வலையுலகில் இருந்து விலகியிருந்தேன். வலையுலகில் இன்னமும் கும்மியும், ஜல்லியும் குறைந்தபாடில்லை. இனி அடிக்கடி வலம் வருவேன்.
"எழுத சொல்லி பல பதிவர்கள் நிறைய பின்னூட்டமிடுகிறார்கள். பதிவுலக நண்பர்கள் அன்பு தொல்லை செய்கிறார்கள்" இப்படியெல்லாம் புருடா விடமாட்டேன்.
இடைக்காலத்தில் நிறைய நொந்த அனுபவங்கள். எனக்கே ஆறுதலாய் இருக்கட்டுமே என்று தான் எழுதுகிறேன்.

இன்று சாலை கடக்கையில் ஒரு வாசகம் பார்த்தேன்.

சாலையில் செல்கையில்
செல்போன் பேசாதீர்.
அழைப்பது
எமனாக கூட இருக்கலாம்.

எப்பொழுதும் கட்டளைகளாக, அறிவுரைகளாக எழுதிருப்பார்கள். படித்ததும் பிடித்திருந்தது.

No comments: