Monday, August 5, 2013

மூடிய கதவும், சில படிப்பினைகளும்!

Shutter - 2012 மலையாளம்

ஒரு நடுத்தர வயதை தாண்டிய மனிதன், முதன்முதலாக பெண் சபலம் ஏற்பட்டு, ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு, ஹோட்டலில் அறை கிடைக்காமல், தான் தொழில் செய்ய வாங்கி போட்டிருக்கும் ஒரு காலி கடையினுள் செல்கிறார்.

கடையை வெளியில் பூட்டிவிட்டு, சாப்பாடு வாங்க செல்கிறார் தெரிந்தவரான ஆட்டோகாரர்.  போகிற வழியில் வேறு ஒரு வாடிக்கையாளரை சந்திக்கும் நபர் குடிக்க சொன்னதில் பேரில் குடிக்கிறார்.  மீண்டும் வண்டியோட்டி வரும்பொழுது, போலீஸ் பிடிக்கிறது. காலையில் அனுப்புகிறது. பகலில் அடைக்கப்பட்ட கடையை சுற்றி பல கடைகள். திறக்கமுடியாத நிலை.பூட்டிய கடையினுள் மாட்டிக்கொண்ட 24 மணி நேரத்தில் அவருக்கு ஏற்படும் அனுபவங்களும், சில படிப்பினைகளூம் கிடைக்கின்றன.  கொஞ்சம் திருந்திய மனிதராய் வெளியே வருகிறார். இது தான் கதை!

****

சண்டைக்கோழியில் விஷாலிடம் உதை வாங்கி, படம் முழுவதும் கொலைவெறியோடு அலைவரே அந்த லால் தான் கதையின் நாயகன்.  ஒரு சபலத்தில் பெண்ணை அழைத்து வந்த பிறகு, வேண்டாம் போய் விட்டுவந்துவிடு! என சொல்லும் பொழுது தடுமாற்றம், பகலில் கடையை திறந்து, அசிங்கமாகி போகுமே என ஒவ்வொரு நிமிடமும் வரும் பதட்டம்! நண்பர்கள் என பழகியவர்களே கேவலமாக பேசுவது! கேவலமாக நடந்து கொள்வது கண்டு அழுவது என அருமையாக நடித்திருக்கிறார்.

சிடுசிடுப்பது, பணம் கொடுத்ததும் கெஞ்சலாய் பேசுவது, எகிறும் பொழுது எகிறுவது என பின்பு நாயகனின் சங்கடமான நிலை கண்டு புரிந்து நடந்துகொள்வது என விலைமாதுவாக வரும் பெண் அசத்துகிறார்.

கதையம்சம் கொண்ட படங்கள் எடுத்து, இடையில் பத்து ஆண்டுகளாக படம் எடுக்காமல் இப்பொழுது படம் எடுக்க அலையும் சீனிவாசன், கதவை பூட்டிவந்து இப்படி போலீசிடம் மாட்டிக்கொண்டு விட்டோமே என நிம்மதி இல்லாமல் அலையும் ஆட்டோகார பாத்திரமும் என அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.

படம் துவங்கும் பொழுது, நூறு பேருக்காவது நன்றி என போடுகிறார்கள். நாம யாருக்காவது நன்றி சொல்லவேண்டும் போலிருக்கிறது. இந்த படத்தை அறிமுகப்படுத்திய கேபிள் சங்கருக்கு நன்றிகள்.

1 comment:

Avargal Unmaigal said...

படம் பார்த்துவிட வேண்டியதுதான்