Saturday, June 30, 2007

இதனால் சகலமானவர்களுக்கும்!

சில சூழ்நிலை மாற்றங்களினால், முன்பு போல, வலையுலகில் வலம் வர இயலவில்லை. இதனால் எனக்கு துளியும் வருத்தமில்லை.

மிதக்கும்வெளி, அய்யனார், லிவிங்மைல் பதிவர்களுடைய அறிவார்ந்த(!), புரியாத கவிதைகள், ரஜினி ரசிகர்களின் இம்சை பதிவுகள், டாலர் செல்வனின் அறிவு ஜீவித்தனமான(!), கட்டுரைகள் (இப்படி வரிசைப்படுத்தினால், நிலவு வரை நீளும். சே! என்ன வர்ணனை!) - லிருந்து தப்பி, நிறைய சந்தோசமாகவும், பழைய உற்சாகத்துடனும் நிம்மதியா வாழ்கிறேன்.

சமீபத்திய சூழ்நிலை மாற்றங்களுக்கான காரணகர்த்தாகளுக்கு நான் நிறைய நன்றிக் கடன்பட்டுள்ளேன். அதேவேளையில், இந்ந வலையுலகை அறிமுகப்படுத்தி, என்னை நோகடித்த அந்த அன்பரை கண்டுபிடித்து "உனக்கு என்ன தீங்கு செய்தேன்?" சட்டைப் பிடித்து, உலுக்கி கேள்வி கேட்கவேண்டும் என வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வலம் வந்த எனக்கே இந்த கதியென்றால், விக்ரமாதித்தனின் சளைக்காத முயற்சியோடும், பாயும், தலையணையோடும் வலையுலகமே கதியென வாழும் பல ஜீவன்களை நினைத்துப் பார்க்கிறேன். பிரமித்துப்போகிறேன். தொடர்ச்சியாக, காதல் படத்தில், பரத் கிறுக்காகி சுற்றித்திரியும் காட்சிதான் தவிர்க்க முடியாமல் நினைவில் எழுகிறது.

வாழ்க வலையுலக அறிவுஜீவிகள்!

பாவம் அப்பாவி மக்கள்!

Thursday, June 28, 2007

பின்னூட்டம் - கவிதை (மீள் பதிவு)

'கட்டுரையை
கவிதை என்கிறாயே!

''நான்
நல்லா இருக்கிறது
உனக்கு பிடிக்கலையா?''

உன்னை
எத்தனைமுறை தான்
திட்டித் தீர்ப்பது?

''எழுதுறதை
தயவு செய்து
நிறுத்தப்போறியா
இல்லையா!'

இப்படி...
எதுவாயினும் பரவாயில்லை

பின்னூட்டமிடுங்கள்

இல்லையெனில்,
இறந்த குழந்தையை
பெற்றெடுத்த தாயின் நெஞ்சாய்
நிறைய்ய வலிக்கிறது.

பின்குறிப்பு :

பின்னூட்டத்திற்காய்,
வலைப்பதிவில்
அலைந்து திரியும்
சில ஜீவன்களுக்கு
சமர்ப்பணம்.

ராயல்டியெல்லாம் வேண்டாம்.
அந்த ஜீவன்கள்
இந்த பதிவை
மறுபிரசுரம்
செய்து கொள்ளலாம்.

Monday, June 4, 2007

நீயும் (சிலந்தி) வலையும் - கவிதை

உன் பிம்பம் விழுந்தே
கணிப்பொறி
திணறும்

ஏதோ கிறுக்குவாய்
புரியாமல் போனாலும்
'ஆகா!
கவிஞர் ஜனித்துவிட்டார்'
புகழ்வார்கள்

பலர் கிறுக்குவார்கள்
'புரியவில்லை' என்பாய்
உனக்கு
அறிவு பற்றாது என்பார்கள்

பூமியை புரட்டிவிடுவதாய்
எழுத்தில் மிரட்டுவார்கள்
வழியில் கிடக்கும்
கல்லைக்கூட
நகர்த்தமாட்டார்கள்

நாளடைவில் - நீயும்
பழகிப்போவாய்

காக்கைக்கூட
கவனிக்காது

உலகமே
உன்னை
கவனிப்பதாய்
பிரமை கொள்வாய்

மாறி மாறி
சொறிந்து கொள்வதில்
நகங்களில்
ரத்தம் வடியும்

காலங்கள் கரையும்
பறக்க மறந்து போவாய்
உன் சிறகுகள்
துருப்பிடித்திருக்கும்

இறுதியில்

கைத்தட்டல்கள்
உன் மனதில்
எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்

தனியறையில்
நீ மட்டும்
சிரித்துக்கொண்டே
இருப்பாய்

பின்னூட்டம் - கவிதை

'கட்டுரையை
கவிதை என்கிறாயே!'

'நான்
நல்லா இருக்கிறது
உனக்கு பிடிக்கலையா?'

'உன்னை
எத்தனைமுறை தான்
திட்டித் தீர்ப்பது?'

'எழுதுறதை
தயவு செய்து
நிறுத்தப்போறியா இல்லையா!'

இப்படி...
எதுவாயினும் பரவாயில்லை

பின்னூட்டமிடுங்கள்

இல்லையெனில்,
இறந்த குழந்தையை
பெற்றெடுத்த தாயின் நெஞ்சாய்
நிறைய வலிக்கிறது.

Sunday, June 3, 2007

நொந்து நூலான மனிதனின் அறிமுகம்




பல பதிவர்களின்
பதிவால்
தூக்கம் கெட்டவன்

நல்லாத்தான் இருந்தேன்
இப்ப - ரெம்ப
நொந்து போயிருக்கேன்

இந்த நிலைமைக்கு
காரணமானங்களை
நான்
சும்மாவிடபோவதில்லை
ஒரு ஹிட் லிஸ்ட் தயாரிச்சுட்டேன்

தன் எழுத்தால், சிந்தனையால்
சித்ரவதை செய்த பொழுது
மெளனமாய்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த
மற்ற பதிவாளர்களையும்
நிம்மதியா
இருக்க விடபோவதில்லை

நான்
நல்லவங்களுக்கு கெட்டவன்
கெட்டவங்களுக்கும் கெட்டவன்

எனக்குள்ளே - ஒரு சிங்கம்
தூங்கிட்டு இருக்குது
எழுப்பினா சீறுவேன்
எழுப்பாட்டி
நல்லாத் தூங்குவேன்

இன்னும்
என்னென்னவோ
சொல்ல நினைக்கிறேன்

மெல்ல மெல்ல
சொல்றேன்

திரும்ப வருவேன்.