Sunday, April 13, 2008

அன்பான வலையுலக பெருமக்களே!


'பெருமக்கள்' என்ற வார்த்தையெல்லாம் கொஞ்சம் அதிகம். 'ஓபனிங்' நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த பில்டப்.

கடந்த நான்கு மாதங்களாக சில சொந்த கவலைகள், புதிதாக வேலைக்கு சேர்ந்ததினால் சில புதிய வாழ்க்கை மாறுதல்கள் என வாழ்க்கை சுழற்றியடித்து, பின்பு சுதாரித்து திரும்பிப் பார்த்தால் நான்கு மாதங்கள் ஓடிவிட்டன.

கடந்த நான்கு மாதங்களாக பதிவர்களையும், அவர்கள் இடும் பதிவுகளையும் உன்னிப்பாய்(!) கவனித்ததில், மொக்கைப் போடுவர்கள் இன்னும் மோசமான மொக்கைப்போடுகிறவர்களாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

அனானிகள் புதிய மாற்றம் பெற்றிருக்கிறார்கள். தன் பெயரைச் சொல்ல முடியாத பயந்தாங்கொள்ளி அனானி, என் பெயரைப் பயன்படுத்தி, உண்மைத்தமிழன் அவர்களை நக்கல் செய்திருக்கிறான்.

பதிவுலகை விட்டு, நான்கு மாதம் வனவாசம் போனது, எனக்கு பயனாகத்தான் இருந்திருக்கிறது.

இனி, தொடர்ச்சியாய் எழுதலாம் என நினைத்திருக்கிறேன். காரணம் - பலரும் உருப்படியாய் ஒன்றும் எழுதாத பொழுது, நாம் ஏன் எழுதக்கூடாது என என் மனசாட்சி கேட்கிறது.

இனி அடிக்கடி வருவேன்.

2 comments:

manjoorraja said...

மீண்டும் வருபவரை வாழ்த்தி வரவேற்கிறேன்.

Anonymous said...

வாருங்கள் வாருங்கள் மொக்கயர்களின் காலை வாருங்கள்