Thursday, June 18, 2009

பூங்கா மனிதர்கள்


தேர்வுக்காக அறையில் படிக்க முயன்று தோற்றுப்போனேன். பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு கடந்த ஒரு வாரம் படிக்க போனேன்.

பூங்காவிற்கு போகும் வழியில்... அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் கடந்து போவதைப் பார்க்கையில்.. பலர் ஒல்லியாக, நோஞ்சனாக, கண்ணாடி போட்டு... பரிதாபமாக இருந்தார்கள்.

பூங்காவில் படிக்கும் பொழுது.... என்னை கடந்து சென்ற பலர் தின்று கொழுத்து, தொடைப்பெருத்தவர்கள், குண்டிப் பெருத்தவர்கள்... புஷ்.. புஷ்..வென மூச்சு வாங்க ஓடுவது போல நடந்தார்கள். நடப்பது போல ஊர்ந்து சென்றார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்கள் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்து போனார்கள். எரிச்சல் மேலோங்கியது. இப்பொழுதெல்லாம் பூங்கா பக்கம் படிக்க போவதில்லை. கொஞ்சம் சிரமப்பட்டாலும் அறையிலேயே படிக்கிறேன்.

No comments: