
ஒரு மணி நேரம் சூரியன் காய வைத்த ஆடைகளை, மழை ஒரு நிமிடத்தில் நனைத்துவிடுகிறது.
*****
தெரிந்தே செய்யும் தவறுகளுக்கெல்லாம் மனிதர்கள், மழையை பலிகடா ஆக்குகிறார்கள்.
*****
மழைக்காலத்தில் மட்டும் சில நாள்கள் பவுடர் அடிப்பதுண்டு. சிலர் கூடுதலாக சென்ட் அடிப்பது போல!
*****
எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்குகிற ஏழைகள் ஒருநாள் மழையை தாங்க முடிவதில்லை. புலம்பி தீர்க்கிறார்கள்.
****
ரெயின்கோட்டை தூக்கி திரியும் பொழுதெல்லாம், மழை டபாய்க்கிறது.
****
குண்டும் குழியுமான சாலைகள், பைக்கில் போனால், குதிரையில் பயணிப்பது போலவே இருக்கிறது.
****
வெள்ளத்தினால் சாகின்ற மக்களில் 99% ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
****