Tuesday, January 6, 2009

“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை!"




“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை; கடனால் தற்கொலை செய்து கொள்கிறோம்”

கடிதம் எழுதி வைத்துவிட்டு நெல்லையில் நகைத் தொழிலாளி குடும்பம் தங்கள் தொழிலில் பயன்படுத்தும் சயனைடு குடித்து 6 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். – 04.01.2009 - நாளிதழ்களிலிருந்து

****

“எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்பதற்கு தற்கொலை செய்து கொண்ட அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம். இறந்து போனவர்களைப் பற்றி உச்சு மட்டும் கொட்டாமல், இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்து பார்க்கலாமே!

***
இந்த நிகழ்வு பற்றி எழுத ஆரம்பித்து, 4 பக்கம், 5 பக்கம் என கட்டுரை நீள்கிறது. அதனால், சேர்ந்து யோசிக்கலாம்.

* இங்கு கடன் வாங்காதவர்கள் யார்? இவர்கள் மட்டும் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?

* மிரட்டி விட்டு போன அல்லது தகாத வார்த்தைகளை சொல்லி திட்டிய நபர்களை தங்கள் கடிதத்தில் எழுதி வைத்திருக்கலாம். ஏன் அவ்வாறு எழுதவில்லை?

* தற்கொலை செய்து கொண்ட குடும்பம் நகை தொழிலாளர் குடும்பம்.
“செய்கூலி இல்லை: சேதாரம் இல்லை” என விளம்பரம் பார்க்கும் பொழுது நமக்கு என்ன உணர்வு வருகிறது?

* இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இயந்திரங்களால் செய்யப்பட்ட நவநாகரிக நகைகளை இறக்குமதி செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. இது சரியா?


* கந்துவட்டி – தனிநபர் பிரச்சனையா? அல்லது சமூக பிரச்சனையா?

1 comment:

nagai said...

கடன் தொல்லை சிலரிடம் அனுபவிப்பது மிக கொடுமை......நானும் தாங்கமுடியாமல் தவிக்கிரேன் கடவுள் தான் வழி சொல்லவேண்டும்...