Wednesday, December 15, 2010

மழைக்கால சிதறல்கள்! - டிவிட்டரில்!


ஒரு மணி நேரம் சூரியன் காய வைத்த ஆடைகளை, மழை ஒரு நிமிடத்தில் நனைத்துவிடுகிறது.

*****

தெரிந்தே செய்யும் தவறுகளுக்கெல்லாம் மனிதர்கள், மழையை பலிகடா ஆக்குகிறார்கள்.

*****

மழைக்காலத்தில் மட்டும் சில நாள்கள் பவுடர் அடிப்பதுண்டு. சிலர் கூடுதலாக சென்ட் அடிப்பது போல!

*****
எவ்வளவு வெயில் அடித்தாலும் தாங்குகிற ஏழைகள் ஒருநாள் மழையை தாங்க முடிவதில்லை. புலம்பி தீர்க்கிறார்கள்.

****
ரெயின்கோட்டை தூக்கி திரியும் பொழுதெல்லாம், மழை டபாய்க்கிறது.

****

குண்டும் குழியுமான சாலைகள், பைக்கில் போனால், குதிரையில் பயணிப்பது போலவே இருக்கிறது.

****

வெள்ளத்தினால் சாகின்ற மக்களில் 99% ஏழைகளாகவே இருக்கிறார்கள்.

****

3 comments:

Anonymous said...

:)

Anonymous said...

Nice

Anonymous said...

அழகான கவிதை சில வரிகள், சமுக உண்மை சில வரிகள்; சில எதார்தங்கள்; அருமை