Thursday, November 17, 2011

குன்றுகள் கவனித்துக்கொண்டிருக்கின்றன! - திரைப்பார்வை


இரண்டு நாள்களுக்கு முன்பு, இரவு தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தேன். எதையும் படிப்பதற்கு பொறுமையில்லை. தொலைக்காட்சியில் ஒவ்வொரு சானலாக தேடிய பொழுது, மூவிஸ் நவ்‍‍-ல் சிக்கியது இந்தபடம் The Hills have eyes.

****

கதை எனப் பார்த்தால்...

அப்பா, அம்மா, இரண்டு மகள்கள், ஒரு டீனேஜ் பையன். மூத்த மகளின் கணவன், அவர்களுடைய கைக்குழந்தை. இவர்கள் அனைவரும் வீட்டிற்குரிய சகல வசதிகளும் அடங்கிய ஒரு ட்ரக்கில், தரைவழி பயணமாக கலிபோர்னியாவிற்கு பயணிக்கிறார்கள்.

இடையில் நியூ மெக்சிகோவில் உள்ள ஆள் அரவமற்ற ஒரு பள்ளத்தாக்கை கடக்கும் பொழுது, அவர்களுடைய ட்ரக்கின் அனைத்து சக்கரங்களும் பஞ்சராகிறது. தப்பு... தப்பு. பஞ்சராக்கப்படுகிறது.

அதற்கு காரணமானவர்கள் அந்த பள்ளத்தாக்கில் அணு சோதனையால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். கண்கள் உள்ளே போய், தலை பெருத்து, பார்க்கும் பொழுதே, கோரமாய் இருப்பவர்கள். பெருங்கூட்டமாகவெல்லாம் இல்லை. சொற்பமான ஆட்கள் தான்.

அந்த பள்ளத்தாக்கு வழியே கடந்து செல்பவர்களை வழிமறித்து, பொருட்களை கொள்ளையடித்து, சிக்குபவர்களை கொலை செய்து, பச்சையாக சாப்பிடுகிற டெரான ஆட்கள்.

இவர்களிடம் இந்த குடும்பம் சிக்கிக்கொள்கிறது. ஒவ்வொருவராக அடுத்தடுத்து கோரமாய் கொல்லப்படுகிறார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு, இறுதியில், இளம்பெண்ணும், பையனும், மருமகனும், குழந்தையும் மிஞ்சுகிறார்கள். யாரோ ஒருவர் இவர்களை மீண்டும் கண்காணிப்பதாய் படம் முடிவடைகிறது.

****

ஒன்னே முக்கால் மணி நேரம் படம். படம் விறு, விறு வென போகிறது. நடித்தவர்களும் நன்றாகவே நடித்திருந்தார்கள்.

இதே தலைப்பில் 1977ல் வெளிவந்த படத்தை தான் மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள். அப்பொழுது படம் நன்றாக ஓடியிருக்கிறது! நம்ம பில்லா போல! அப்போதைய படத்தின் இயக்குநர் தான், இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.

அன்று நாகரிகம் அடையாத நரமாமிசம் சாப்பிடுகிறவர்கள் வில்லன்கள். இப்பொழுது உலகம் நாகரிகம் அடைந்தவிட்ட படியால் (!) அணு சோதனையால், பாதிக்கப்பட்டவர்களை வில்லனாக காட்டியிருக்கிறார்கள். ஹாலிவுட்காரர்கள் வெரைட்டிக்காக புதுப்புது வில்லன்களை உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள்.

படம் பார்க்கும் பொழுது, அவர்கள் சொல்லிய கதையை மீறி, ஏன் இந்த மனிதர்களுக்கு இப்படி ஆனது? இவர்களை அரசு ஏன் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தது? என்றே மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

இந்த படமும் வெற்றியாகி, இரண்டாவது பாகமும் அதற்கு பிறகு வெளிவந்து, இப்பொழுது, மூன்றாவது பாகம் இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது.

தேடியெல்லாம் பார்க்காதீர்கள். அப்படியெல்லாம் சிறப்பான படமில்லை. மூவிஸ் நவ்-ல் அந்த சிடியை தேய் தேய் என தேய்ந்து போகும் வரை காலை, மதியம், இரவு என மாறி மாறி போட்டுக்கொண்டேயிருப்பார்கள்.

இந்த படத்தில் தரை வழிப்பயணம் செய்வதை பார்த்ததும், சில நாள்களுக்கு முன்பு, எஸ். இராமகிருஷ்ணன் எழுதிய ஒரு பிரெஞ்சு படம் நினைவுக்கு வருகிறது. அருமையான படம். அப்பாவும், மகனும் பிரான்ஸ்லிருந்து, மெக்கா வரைக்கும் தரை வழிப்பயணம் மேற்கொள்கிறார்கள். பல்வேறு அனுபவங்கள். பல புரிதல்கள்.

கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு. பார்க்கவேண்டிய படம். இந்த பதிவு எழுதியது கூட இந்த படத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகதான்!

ஒரு மகத்தான பயணம் - எஸ். இராமகிருஷ்ணன்

***

2 comments:

Anonymous said...

Nice

satya

ஜெட்லி... said...

எனக்கு பிடித்த படங்களில் ஒன்று...