Saturday, September 22, 2012

வாசகர்களுக்கு நன்றி!

'வலையுலகம் நொந்தகுமாரனும்' தளம் இன்றைக்கு 100 வாசகர்களை தொட்டிருக்கிறது. இன்றைக்கு மோகன்குமார் "நான் 100வது வாசகர்" என பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்கும், அனைத்து வாசகர்களுக்கும் நன்றி பகிர்வதற்கான பதிவு இது.

ஏற்கனவே இரண்டுமுறை நன்றி சொல்லியிருக்கிறேன். முதல்முறை கடந்த ஆண்டு தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்து, அந்த வாரத்தின் இறுதியில் தேர்ந்தெடுத்தற்காக தமிழ்மணத்திற்கும், உற்சாகப்படுத்திய நம் மக்களுக்கும் நன்றி சொன்னேன்.  இரண்டாவது முறை, சமீபத்தில் தளம் 50000 ஹிட்ஸ்களை தொட்டப்பொழுது நன்றி பகிர்ந்தேன்.

பொதுவாக பதிவுகளுக்கு வாசகர்களின் கருத்துக்கள் மிக குறைவாக‌ தான் வருகின்றன.  ஆகையால், வருகைகளும், பின் தொடர்பவர்களாகிய வாசகர்களும் தான் எழுதுவதற்கு உற்சாகப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லாமல் கடந்தால் நன்றாக இருக்காது.

எப்பொழுதெல்லாம் ஆரோக்கியமாய், அழுத்தமாய் பதிவுகள் எழுதுகிறேனோ அப்பொழுதெல்லாம் வாசகர்கள் அதிகரிப்பதை கவனித்திருக்கிறேன்.

தொடர்ச்சியாய் மாதத்திற்கு நான்கு பதிவுகள் எழுதுவது கூட அதிகம் தான். அதை அதிகப்படுத்தலாம் என பலமுறை நினைத்திருக்கிறேன்.  ஆனால் சாத்தியமில்லாமல் நாட்கள் நகருகின்றன. அதற்கு முதற்காரணம் பெருநகர  வாழ்க்கை தான்.  நாள்முழுவதும் அலைந்து திரிந்து அசதியாய் இரவு அறையை அடையும் பொழுது கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு, தூங்கத்தான் தோன்றுகிறது.

பல விசயங்களை எழுத நினைத்து, முடியாமல் போனதும் இருக்கிறது.  'மனிதர்கள்' வரிசையில் என் அம்மாவைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்து பலமுறை தோற்றுப்போயிருக்கிறேன்.

மனநிலையும் பிரதான பங்கு வகிக்கிறது. சில நாள்கள் நேரம் அமைந்தாலும், ஒரு வாக்கியம் கூட கோர்வையாய் எழுத முடியாமல் போன அனுபவமும் உண்டு.

இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.  நிறைய படித்தால் தான் எழுத்து இன்னும் கொஞ்சம் அடத்தியாய், ஆரோக்கியமாய் வரும். நிறைய படிக்கவேண்டும். வாசகர்களுடன் அதை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருக்கிறது. அதற்கு நிறைய உழைக்கவேண்டும். நினைப்புக்கு ஏற்ற உழைப்பு இல்லை. வருங்காலங்களில் இன்னும் உழைக்க முயல்கிறேன்.

மற்றபடி, எழுதுவதற்காக எதையாவது எழுதி தளத்தை நிரப்பி, என் நேரத்தையும், முக்கியமாக வாசகர்களின் நேரத்தை வீணடிக்ககூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

மீண்டும் நன்றிகளுடன்,

குமரன் ஜனா.

2 comments:

Prem S said...

வாழ்த்துக்கள் அன்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...