Friday, November 8, 2013

இரயில் பயணம் - ‍சில குறிப்புகள்

பயணத்தில் கூட 4 டப்பாக்களில் விதவிதமாய் உணவு உண்பவர்களை பார்த்தால், பொறாமையாக இருக்கிறது!

இந்த 'செல்'லும், காதில் மாட்டுகிற வயரும் ரயில் சிநேகத்தை கெடுத்துவிட்டது!

'பிஸ்கட்டோ எதுவோ வாங்கி சாப்பிடாதீர்கள்' என தொடர்ந்து சொல்லும் எச்சரிக்கைகள் சக பயணிகளை திருடனாய் பார்க்க வைக்கிறது!

உறுதி செய்யப்பட்ட படுக்கை/உட்காரும் இடங்களை வாழ்நாள் முழுமைக்கும் வாங்கி இருப்பது போல நடந்துகொள்கிறார்கள்.

ஆர்.ஏ.சியில் கணவன் படுத்து உறங்கி கொண்டும், மனைவி உட்கார்ந்து தூங்கி வழிந்தும் எப்பொழுதும் பயணிக்கிறார்கள்.

பேருந்து பயணம் எனில் மூன்று இட்லிகளோடு சிக்கனமாய் முடித்துகொள்ள வேண்டியிருக்கிறது! ரயில் என்றாலோ பிரியாணியை கூட வயிறு முட்ட சாப்பிட முடிகிறது!

ரயிலில் சாப்பாட்டை சுவையாக எந்த காலத்திலும் தந்துவிட‌க்கூடாது என அம்மா மீது சத்தியம் செய்திருப்பார்கள் போல!

பகல் நேர பயணத்தில் எப்படியாவது ஒரு திருநங்கையை பார்த்துவிடமுடிகிறது!

படுக்கை உறுதி செய்யப்பட்ட பயணமும், அன்ரிசர்வ் பயணமும் உலகம் இரண்டாய் இயங்குவதை தரிசனம் செய்யலாம்!

2 comments:

ராஜி said...

ரயில் பயணத்தை கண்முன்னே கொண்டு வந்தது.

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.