Monday, January 27, 2014

காதலித்தால் தண்டனை “பாலியல் பலாத்காரம்”

மேற்கு வங்கத்தில் ஒரு பழங்குடிப் பெண் காதலித்தாள் என்பதற்காக சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவரையும் தண்டத்தொகையாக தனித்தனியாக ரூ. 25000 கட்ட சொல்லியிருக்கிறார்கள்.

பெருந்தொகை அதனால் கட்ட இயலாது என்று பெண்ணின் குடும்பம் சொன்னதற்காக ஊரில் உள்ள யாரும் பாலியல் பலாத்காரம் செய்யலாம் என கட்டப்பஞ்சாயத்து கூடி இப்படி சாதி, ஆணாதிக்க வெறியுடன் ’தீர்ப்பு’ சொல்லியிருக்கிறார்கள்.


திங்கள் இரவு ஒரு செட்டில் அடைத்து வைத்து புதன் காலை வரை 13 பேர் வரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். கடுமையான ரத்தப்போக்கினால் உயிருக்கு ஊசலாடிய நிலையில் கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுத்திருக்கிறார்கள்.


பெரும் போராட்டத்திற்கு பிறகு, மருத்துவமனையில் சேர்த்து, இப்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார்.


பலர் ஒன்று கூடி இப்படி ஆணாதிக்க, சாதி வெறிப்பிடித்த கொடூரமான தீர்ப்பினை அறிவித்து, நடைமுறைப்படுத்த முடிகிறது என்றால், இந்த சமுதாயம் எத்தனை பிற்போக்குடன் இருக்கிறது என்பது குறித்து தீவிரமாய் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.


பெண்கள் அரசாண்டால் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்த சம்பவம் நிரூபித்து இருக்கிறது. மம்தா அரசு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகவேண்டும்.


தேடிப்படிக்கும் பொழுது, அங்கு கல்விக்கூடமே இல்லை என்ற செய்தி தெரியவருகிறது. 35 ஆண்டு காலம் நாங்கள் மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்தோம் என பெருமை பீத்தும் சிபிஎம் காரர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்.

நேற்று குடியரசு தினம். பலரும் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறார்கள். இந்தியா இரண்டு இந்தியாவாக தெளிவாக பிரிந்து நிற்கிறது. பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு இருண்ட உலகமாக, கொடூரமான இந்தியாவாக தான் இருக்கிறது.


அப்பாவி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி குறித்து, இந்தியன் என்பதில் வெட்கி தலை குனிகிறேன்.


செய்தி :


கும்பல் பாலியல் வன்முறை  தி இந்து

No comments: