Friday, April 18, 2008

நகரவாசி - கவிதை



விடிகாலையில்
சூரிய உதயம் பார்த்து
வருடங்களாயிற்று.

கடற்கரையில்
அலைகளோடு விளையாடி
சில மாதங்களாயிற்று.

நண்பர்களோடு
அரட்டையடித்து
சில வாரங்களாயிற்று

அவசர அவசரமாய் இயங்கி
தானாய் புலம்பி
தனித்தீவாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்.

பாவம் நான்
எனக்காய் இரக்கப்படுங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாய்
நகரவாசியாய்
மாறிக்கொண்டிருக்கிறேன்.

2 comments:

Anonymous said...

?

Anonymous said...

பாவம் தான் நீங்கள்...