Sunday, March 15, 2009

அசை போடுதல்!


கோவில் விழாவில்
சிறு வயதில்
கரகாட்டகாரியுடன்
குத்தாட்டம் போட்டது.

வேகவேகமாய்
முன்னேறி
இதயம் படபடக்க
அவள்
பெயர் கேட்டது.

நடுநிசிகளில்
நண்பர்களோடு
அளவுளாவியது.

அறையில்
யாருமற்ற பொழுதுகளில்
பின் நகர்ந்து - மனம்
அசை போடுகிறது.

வயதாகிறதோ?

1 comment:

Anonymous said...

உனக்கு வயசாயிருச்சா? நொந்தகுமாரா?!