
* சட்டமன்றத்தால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முக்கால்வாசி முடங்கி கிடக்கின்றன. மீதி ஆமை வேகத்தில் நகருகின்றன. சட்டமன்ற கட்டிட வேலைகள் மட்டும் ஏன் புயல் வேகத்தில்?
* தமிழ்நாட்டு பாடசாலைகள், அரசு அலுவலங்கள் எல்லாம் அரசின் பொதுப்பணித்துறைக் கட்ட... 425 கோடியில் சட்டமன்றம் கட்டுவது ஜெர்மன் நாட்டின் ஜி.எம்.பி. நிறுவனம். உள்ளே நடமாடுவது தாங்களே என்பதலா! இதுவும் பன்னாட்டு சேவையா?
* பெஞ்சுக்கு பதிலாக வசதியான குஷன் இருக்கைகளாம். இனி, சட்டமன்ற கூட்டத்தொடரின் பொழுது குறட்டைவிட்டு எம்.எல்.ஏ.க்கள் வசதியாக தூங்கலாம்.
* அதிமுக ஆட்சியில் வேட்டியை அடிக்கடி உருவிவிடுகிறார்கள். ஆகையால் புதிய சட்ட மன்றத்தில் வேட்டி சட்டைக்கு பதிலாக கோட்-சூட் போடலாம் என பரிதி இளம் வழுதி பரிந்துரைப்பார்.
* பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் நாம் சேவை செய்கிறோம். ஆகையால், புதிய

சட்டமன்றத்தத ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல பராமரிக்கலாம். எம்.எல்.ஏக்கள் கோட்-சூட் போடலாம் என தயாநிதி மாறன் தாத்தா கருணாநிதியிடம் சொல்லலாம்.
* மக்களுக்காக திட்டம் போடுவது போல பன்னாட்டு நிறுவனங்களுக்கு விசுவாசமாய் வேலை செய்யவேண்டும். மக்களைப் போல உடை அணிந்தால் தான் நம்மை சந்தேகப்பட மாட்டார்கள் என கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசித்தது போல கருணாநிதி தன் பேரனுக்கு உபதேசிப்பார்.
* மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ்கிறார்கள். 425 கோடியில் எழுந்து நிற்கிறது புதிய சட்ட மன்ற வளாகம். பாவம் மக்கள்!