Friday, July 31, 2009

425 கோடியில் புதிய சட்டமன்றம்! - சில குறிப்புகள்!


* சட்டமன்றத்தால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் முக்கால்வாசி முடங்கி கிடக்கின்றன. மீதி ஆமை வேகத்தில் நகருகின்றன. சட்டமன்ற கட்டிட வேலைகள் மட்டும் ஏன் புயல் வேகத்தில்?

* தமிழ்நாட்டு பாடசாலைகள், அரசு அலுவலங்கள் எல்லாம் அரசின் பொதுப்பணித்துறைக் கட்ட... 425 கோடியில் சட்டமன்றம் கட்டுவது ஜெர்மன் நாட்டின் ஜி.எம்.பி. நிறுவனம். உள்ளே நடமாடுவது தாங்களே என்பதலா! இதுவும் பன்னாட்டு சேவையா?

* பெஞ்சுக்கு பதிலாக வசதியான குஷன் இருக்கைகளாம். இனி, சட்டமன்ற கூட்டத்தொடரின் பொழுது குறட்டைவிட்டு எம்.எல்.ஏ.க்கள் வசதியாக தூங்கலாம்.

* அதிமுக ஆட்சியில் வேட்டியை அடிக்கடி உருவிவிடுகிறார்கள். ஆகையால் புதிய சட்ட மன்றத்தில் வேட்டி சட்டைக்கு பதிலாக கோட்-சூட் போடலாம் என பரிதி இளம் வழுதி பரிந்துரைப்பார்.

* பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் நாம் சேவை செய்கிறோம். ஆகையால், புதிய
சட்டமன்றத்தத ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல பராமரிக்கலாம். எம்.எல்.ஏக்கள் கோட்-சூட் போடலாம் என தயாநிதி மாறன் தாத்தா கருணாநிதியிடம் சொல்லலாம்.

* மக்களுக்காக திட்டம் போடுவது போல பன்னாட்டு நிறுவனங்களுக்கு விசுவாசமாய் வேலை செய்யவேண்டும். மக்களைப் போல உடை அணிந்தால் தான் நம்மை சந்தேகப்பட மாட்டார்கள் என கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசித்தது போல கருணாநிதி தன் பேரனுக்கு உபதேசிப்பார்.

* மக்கள் பிச்சைக்காரர்களாக வாழ்கிறார்கள். 425 கோடியில் எழுந்து நிற்கிறது புதிய சட்ட மன்ற வளாகம். பாவம் மக்கள்!

4 comments:

Anonymous said...

truth

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Anonymous said...

தோழருக்கு எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

தோழருக்கு எமது நவம்பர் புரட்சி நாள் வாழ்த்துக்கள்