Wednesday, June 6, 2012

சிறகடித்து பறந்தன!

"குட்மார்னிங்"
"குட் நைட்"
"கடி ஜோக்ஸ்"
மொக்கை ஜோக்ஸ்"
- என எல்லா எஸ்.எம்.எஸ்-மும்
கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து
இப்பொழுது
சுத்தமாய் நின்றுபோய்விட்டன!
சீரியசாகிவிட்டேனே?!
வயசாயிருச்சா?!

****

பலருடைய படைப்புகளை வாசிக்கும் பொழுது படிமங்கள்; வரலாற்று அறிவு; வார்த்தை செறிவு என பல விசயங்கள் அசத்துகின்றன. நாம் எழுதுகிற வடிவம் ஒன்றுமே இல்லையென தோன்றுகிறது.

ஆனால், எளியவர்களை பற்றி நாம் பதிவு செய்கிறவை மிக முக்கியமானவை என்றும் தோன்றுகிறது.

****

நாவல் படிக்கும் பொழுது தான், கொஞ்சம் தள்ளி நின்று தன்னையும், சுற்றி வாழ்கிற மனிதர்களையும் கவனிக்கும் பார்வை கூடுதலாக கிடைப்பதாக உணர்கிறேன்.

****

எழுதுகிற விசயங்கள் மெல்ல மெல்ல ஒன்றோடு ஒன்றாக மனதில் சேர்ந்துகொண்டே வருகிறது. இதை எழுதி முடித்தால் தான், இன்று நிம்மதியாய் தூக்கம் வரும் எனும் பொழுது அது பதிவாகிவிடுகிறது.

****

- கடந்த வாரம் முகநூலில் பகிர்ந்தவை!

2 comments:

கோவி said...

அருமையான பதிவுகள்.

கோவி said...

அருமையான பதிவுகள்.