Friday, June 29, 2012

ஒரு கல்லில் இரண்டு மாங்கா! - காவல்துறை

எங்கள் அலுவலகம் அருகே ஒரு சாலையில் நெரிசல் அதிகம் என அந்த பாதையை ஒருவழிப்பாதையாக மாற்றியது போக்குவரத்து காவல்துறை!

"இது ஒரு வழிப்பாதை மாற்றுப்பாதையில் போ!" என சொல்வதற்கு இரண்டு போலீஸ்காரர்களையும் நியமித்திருந்தார்கள். மக்களும் மீண்டும் மீண்டும் அந்த பாதையை பயன்படுத்த முனைந்தார்கள்.

இரண்டு காவல்துறைக்கு தண்டமா சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கே! மக்களும் திரும்ப, திரும்ப இந்த சாலைப்பக்கம் வருகிறார்களே என ரூம் போட்டு யோசித்த போலீஸ், ஒரு ஏற்பாடு செய்தது.

கூடுதலாக ஒரு சார்ஜன்டை நியமித்து, அந்த இடத்தை சோதனை செய்யும் இடமாக மாற்றிவிட்டது.  ஹெல்மெட் போடாதது, லைசன்ஸ் இல்லாதது, காரில் கருப்பு கண்ணாடி ஓட்டாதது என இப்பொழுது (லஞ்ச) வசூல் மழையில் நனைகிறார்கள். மக்களும் இந்த பாதையில் தலை வைக்காமல் தெறித்து வேறுவழியில் போகிறார்கள்.

ஸ்காட்லாண்ட்க்கு அடுத்து நம்ம போலீஸ் சூப்பர் என்பது இப்படி சிந்திப்பதில் தான் நிரூபிக்கிறார்கள்.

No comments: