Sunday, October 14, 2012

கடற்கரையும் கவிதையும்!

மேகங்களால்
சூழ்ந்திருந்தது சென்னை!

ஆங்காங்கே
மழை தூறிக்கொண்டிருந்தது!
நனைந்துகொண்டே
மெரினா வந்தடைந்தேன்!

காதலர்கள் அதிகம்
கண்ணில்படுகிறார்கள்!
சனிக்கிழமை என்பதால்
இருக்கலாம்!

கடற்கரை காற்றில்
கவிதை வாசிக்க
புத்தகம் எடுத்து வந்திருந்தேன்!

நாலு இளம்பெண்கள்
அலைகளோடு
விளையாட துவங்கினார்கள்!

ஒரு கவிதை கூட
கடைசிவரை வாசிக்கவே இல்லை! :)

4 comments:

சசிகலா said...

கவிதை படிக்கவில்லை சரி
எழுதியிருக்கனுமே.

திண்டுக்கல் தனபாலன் said...

அது எப்படி வாசிக்க முடியும்...?

குமரன் said...

நீங்கள் சொல்வது சரி தான்! :) கவிதை தான் எழுதிட்டனே!

நன்றிகள் சசிகலா, தனபாலன் இருவருக்கும்!

இராஜராஜேஸ்வரி said...

ஒரு கவிதை கூட
கடைசிவரை வாசிக்கவே இல்லை!

கவிதை?????!!