Saturday, March 2, 2013

அமைதி!

அமைதி!

மின்சாரமற்ற, சத்தங்கள் அடங்கிய பொழுதுகளில், மனம் கடந்து வந்த பாதைகளை அசைப்போடுகிறது.

வாழ்க்கை சாரமற்று சக்கையாய் இருப்பது மெல்ல புரிகிறது. பயந்துபோய், கையில் உள்ள செல்பேசியில் பண்பலையை சத்தமாய் அலற வைக்கிறேன்.

இப்பொழுது கொஞ்சம் நிம்மதியாய் இருக்கிறது.

****

படிக்காத பொழுது நிறைய தெரிஞ்சுகிட்டோம் என நினைக்கிற மனது, மனிதர்களையும், புத்தகங்களையும் தொடர்ந்து வாசிக்கும் பொழுது தான், நாம் புரிந்துகொண்டது ரெம்ப குறைச்சல் என உறைக்கிறது!

****
அன்பு சகலத்தையும் தாங்கும்,
அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும்,
அன்பு சகலத்தையும் நம்பும்,
அன்பு சகலத்தையும் சகிக்கும்.
அன்பு ஒருகாலும் ஒழியாது 1 கொரி 13 :7 , 8

காத்திருந்த வேளையில், உள்ளே மருத்துவர் யாரோ ஒரு தம்பதியினரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நன்றாக தான் இருந்தது!

*****
- முகநூலில் பகிர்ந்தவை!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

மனம் சப்தத்தை மிகவும் விரும்புகிறதோ...?