Thursday, April 3, 2014

கடவுளைப் பார்த்தேன்!



அது ஒரு பெந்தேகொஸ்தே சபை.  கல்லூரி படிக்கும் பொழுது ஒரு தோழியை சந்திக்க போயிருந்தேன்.  இறைவனின் அருள் வேண்டி, பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.

கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி கொண்டிருந்தவர்  திடீரென "கடவுளை காண நினைக்கிறீர்களா?" கையை உயர்த்துங்கள் என்றார். விளையாட்டாய்,  அருகில் அமர்ந்திருந்த தோழி என் கையை தூக்கினாள்.

கூட்டத்திலிருந்து  7 பேர் போனதோடு, என்னையையும் அழைத்ததால்,  வேறு வழியில்லாமல் போனேன்.

8 பேரையும் மண்டியிட சொன்னார்கள்.  பிரார்த்தனையை மீண்டும் தொடர்ந்தார்கள்.  துதித்தார்கள்.  பாடினார்கள். அழுதார்கள்.  முக்கால் மணி நேரம்.  இப்பொழுது நானே கையை உயர்த்தினேன்.

கடவுளைக் கண்டீர்களாஎனக் கேட்டார்.

ஆம்! பார்த்தேன்என்றேன்.

அப்ப நீங்கள் போகலாம்என்றார்.

கூட்டத்திற்கு பின்னால் வந்து அமர்ந்தேன்.  அதற்கு பிறகு, அரை மணி நேரம் கழித்து எல்லோரும் கிளம்பினார்கள்.  நாங்களும் கிளம்பினோம்.

இவ்வளவு பிரார்த்தனை செய்தும், நம் கண்களுக்கு தெரியாத கடவுள்,  இவனுக்கு தரிசனம் தந்துவிட்டாரே என தோழிக்கு என்மீது ஒரே பொறாமை.

“நிஜமாவே பார்த்தியா!என்றாள்.

“பார்க்கலைன்னு  சொன்னா விடவா போறீங்க! அது தான் கால் வலி பொறுக்காம, பார்த்தேன்னு சொன்னேன்!என்றேன்.

வெறுப்பாய் பார்த்தாள். 

1 comment:

Unknown said...

//அதுக்கு நாம என்ன செய்யறது? கடவுள் ஒருத்தர் இருந்தால் தானே தெரிவதற்கு!//

:)))