Tuesday, June 24, 2014

ஆயிரத்தில் ஒருவன் – சில குறிப்புகள்!




ஆயிரத்தில் ஒருவன் சத்யத்தில் வெளியிட்டு 100 நாட்களை கடந்து பயணிக்கிறது! என்னுடைய சிறுவயதில் இருந்தே அம்மா எம்.ஜி.ஆர் ரசிகர். அம்மா அவரை புகழ்ந்து புகழ்ந்து பேசி, பிள்ளைகள் எங்களுக்கும் எம்.ஜி.ஆரை பிடித்துப்போய்விட்டது!   அப்பாவிற்கு எம்.ஜி.ஆரை பிடிக்காது!  அவருக்கு சிவாஜிகணேசனைத் தான் பிடிக்கும்! சிவாஜியின் நடிப்பும், அப்பா காங்கிரசுகாரர். சிவாஜியும் காங்கிரசுகாரர் என்பதாலும் இருக்கலாம் என இப்பொழுது தோன்றுகிறது அம்மாவை ஊரிலிருந்து அழைத்து வந்து சத்தியத்தில் டிஜிட்டலில் ஆயிரத்தில் ஒருவனை காணவைக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது!.

எம்.ஜி.ஆரின் விரல்விட்டு எண்ணக்கூடிய சில படங்கள் எத்தனைமுறைப் பார்த்தாலும், சலிக்காது! அதில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று!

ஆயிரத்தில் ஒருவனைப் பற்றி அபிலாஷ் உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் படம் வெளிவந்த சமயத்தில் உள்ள அரசியல் நிலைமைகளோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். சுவாரசியமாக இருக்கிறது!

கட்டுரையில் சில இடங்கள்!
//ஜெயலலிதாவுக்கு இப்படம் வெளியாகும் போது 14 வயது. குழந்தைக்கும் பெண்ணுக்கும் இடையிலான அந்த முகத்தில் பாசாங்கில்லாத ஒரு அழகு ஜொலிக்கிறது//

//ஜெயலலிதா தோன்றும் முதல் காட்சியிலே செங்கப்பன் அவரிடம் சொல்கிறார், “நீ ஆயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரி ஆகி ஆளப் போகிறாய் அம்மா.” அது வரலாற்றில் பலித்து விட்டது பாருங்கள்.//

//தீவில் வெட்டுகிற மரங்களை ஆற்றில் ஒழுக விட்டுப் பதுக்கி கட்டுமரம் கட்டி தப்பிக்க திட்டமிடுகிறார் எம்.ஜி.ஆர். ஆனால் எதிர்பாராமல் கடற்கொள்ளையர்கள் தாக்க, அவர்களை எதிர்த்து விரட்டினால் சுதந்திரம் தருவதாய் தீவின் தலைவர் செங்கப்பன் சொல்கிறான். விரட்டுகிறார்கள். ஆனால் சுதந்திரம் தராமல் ஏமாற்று கிறான். அடுத்து அவர்களே அங்கிருந்து தப்பித்து கொள்ளையர் கப்பலில் ஏறி கொள்ளையர்களைத் தோற்கடித்து கைப்பற்றி அதன் மூலம் தப்பிக்க பார்க்கிறார்கள். ஆனால் கொள்ளையர்களிடமே கைதிக ளாகப் பின்னர் சூழ்ச்சியால் மாட்டிக் கொள்கிறார்கள். இப்படிப் போகிறது கதை. கிட்டத்தட்ட இறுதிக் காட்சி வரை அடிமைகளை அவர் காப்பாற்றுகிறேன் என அழைத்துப் போய் மேலும் மேலும் பிரச்சினைகளில் தான் மாட்டி விடுகிறார். மேலும் அவராகத் திட்டமிட்டு வெற்றி பெறுவதை விட அதுவாக அமைகிற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு காயாக நகர்த்துகிறார்.//

//ஒரு அதிகாரப் போட்டியில் ஜெயிப்பதற்கான ஒரு கருணையற்ற மன உறுதி அற்றவராகவே எம்.ஜி.ஆர். பாத்திரம் இருக்கிறது. இவ்விதத்தில் நம்பியாரின் பாத்திரம் முக்கியமானது. அவர்தான் கொடுங்கோல மன்னனை இறுதிக் காட்சியில் கத்தி எறிந்து கிட்டத்தட்ட கொல்கிறார். ஆனால் நம்பியார் எவ்வளவோஅவன் சாகட்டும் விடுங்கள்எனக் கேட்டும் எம்.ஜி.ஆர். அவருக்கு வைத்தியம் பண்ணி காப்பாற்றுகிறார். ஆனால் உயிர்பிழைத்ததும் கொடுங்கோலன் அவர்களைக் கைது பண்ணி தன் நாட்டுக்குக் கொண்டு செல்கிறான். நல்லவேளை, அவன் மனம் திருந்தி விடுவதாய் காட்டுவதால் பிரச்சினை தீர்கிறது. ஆனால் ஒரு தலைவனாக எம்.ஜி.ஆர். பாத்திரமான காந்தியவாத தாக்கம் கொண்ட மணிமாறன் சொதப்பல் பேர்வழி. அவருக்குப் பதில் நம்பியார் இந்த அடிமைகளுக்குத் தலைமை ஏற்றிருந்தால் படம் ஆரம்பித்த முதல் அரைமணி நேரத்தில் ஒரே சண்டையில் கொடுங்கோலனைக் கொன்று வென்றிருப்பார் எனத் தோன்றுகிறது. ஒரு விதத்தில் இந்தப் படத்தின் நிஜமான ஹீரோ நம்பியார் தான். ஆனால் இந்த சொதப்பல்களும் கபடமின்மையும்தான்ஏழைகளின் நாயகனாக”, Òநல்லவனாகஎம்.ஜி.ஆரை ஒரு அணுக்கமான நாயகனாகக் கட்டமைக்கிறது//

1 comment:

பால கணேஷ் said...

//ஜெயலலிதா தோன்றும் முதல் காட்சியிலே செங்கப்பன் அவரிடம் சொல்கிறார், “நீ ஆயிரம் அடிமைகளுக்கு சொந்தக்காரி ஆகி ஆளப் போகிறாய் அம்மா.” அது வரலாற்றில் பலித்து விட்டது பாருங்கள்.//
-சூப்பரான வார்ததைகள்.

என் அப்பா வாத்யார் ரசிகர்ங்கறதால சின்ன வயசுலருநதே அவர் கூடப் பாக்கறதெல்லாம் வாத்யார் படமாத்தான் இருக்கும். அப்படி நானும் தீவிர ரசிகனாய்ட்டேன்.

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அதை தனக்கும் தன்னைச் சேர்ந்தவங்களுக்கும் சாதகமாக்கிக்கறவன் நல்ல தலைவன் தானே...? எனக்கென்னமோ வாத்யார் பாத்திரப் படைப்பு சரின்னுதான் தோணுது.