பிழைப்புதான் என்னையும்
சென்னைக்கு இழுத்து வந்தது. வந்த நாளிலிருந்து
என்னையையும் ஒருவனாய் ஏற்றுக்கொண்டது!
ஓடு! ஓடு! என ஓடுகிற இயந்திரகதியான
வாழ்க்கையும், அதனால் வரும் மனப்பதட்டமும்
எப்பொழுதும் என்னை பயமுறுத்துபவை!
பிழைக்க வந்த பிறகு,
சொந்த ஊரை நினைத்துக்கொண்டிருப்பது தவறு. இத்தனை காலம் மெளனராகம் ரேவதியைப் போல தான்
இந்த மண்ணில் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதை நினைக்கையில் வெட்கமாய் இருக்கிறது!
வந்த நாளில் துவங்கி,
சென்னையின் அழகைப் பாதுகாக்கும், எளிய மக்களுடன் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்
என்பதை நினைக்கையில் சந்தோசமாக இருக்கிறது!
375 வயதாகும் சென்னைக்கு
எனது இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment