Friday, October 28, 2011

பண்டிகை! - சில குறிப்புகள்


தீபாவளிக்கு வரும் வாழ்த்துக்கள்
குறைந்துவிட்டது!
குறுஞ்செய்திகளுக்கான விலையை
அதிகரித்துவிட்டார்களா?
கடவுள் மறுப்பாளன் என்பது பரவிவிட்டதா?

கறி வாங்க போன அக்கா பையன்
ஆறு அறுப்பதை பார்த்துவிட்டு
கறிசாப்பிடவில்லை.
சிறுவயது நினைவுகள்
மேலே வருகின்றன.

நான்காவது ஆண்டும்
குலோப்ஜாமுன் செய்யும் முயற்சியில்
அண்ணி தோற்றுவிட்டார்.
எங்களால் தப்பிக்க முடியவில்லை!

"உனக்கும் என்னை மாதிரியே
வெடியென்றால் பயமா? என்கிறான்
அண்ணனின் குட்டி பையன்!

சர்க்கரை படுத்தும் பாட்டில்
அம்மாவிற்கு எல்லா பற்களும் காலி!
கறியை கடிக்கமுடியவில்லை!
இனிப்புகளை ஏக்கமாய் தான்
பார்க்கமுடிகிறது!

ஐஆர்டிசின் அழுகுணி ஓட்ட பந்தயத்தில்
இந்தமுறை ஜெயித்துவிட்டேன்!
ஆம்னி கொள்ளையிலிருந்தும்
தப்பித்துவிட்டேன்!
பயணம் சிரமமில்லை!

No comments: