Sunday, October 23, 2011

காக்கை கூட கவனிக்காது....!


நீயும் (சிலந்தி) வலையும்!

உன் பிம்பம் விழுந்தே
கணிப்பொறி
திணறும்

ஏதோ கிறுக்குவாய்
புரியாமல் போனாலும்
'ஆகா!
கவிஞர் ஜனித்துவிட்டார்'
புகழ்வார்கள்

பலர் கிறுக்குவார்கள்
'புரியவில்லை' என்பாய்
உனக்கு
அறிவு பற்றாது என்பார்கள்

பூமியை புரட்டிவிடுவதாய்
எழுத்தில் மிரட்டுவார்கள்
வழியில் கிடக்கும்
கல்லைக்கூட
நகர்த்தமாட்டார்கள்

நாளடைவில் - நீயும்
பழகிப்போவாய்

காக்கைக்கூட
கவனிக்காது

உலகமே
உன்னை
கவனிப்பதாய்
பிரமை கொள்வாய்

மாறி மாறி
சொறிந்து கொள்வதில்
நகங்களில்
ரத்தம் வடியும்

காலங்கள் கரையும்
பறக்க மறந்து போவாய்
உன் சிறகுகள்
துருப்பிடித்திருக்கும்

இறுதியில்

கைத்தட்டல்கள்
உன் மனதில்
எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்

தனியறையில்
நீ மட்டும்
சிரித்துக்கொண்டே
இருப்பாய்!

****

குறிப்பு : இந்த பதிவின் வழியாக தான் பதிவுலத்தில் என் எழுத்தை பதிய
துவங்கினேன். ஆகையால், நீங்கள் படித்தே ஆக வேண்டும் என்பதால் தவிர்க்க முடியாமல் மீள்பதிவு செய்கிறேன்.

//காலங்கள் கரையும்
பறக்க மறந்து போவாய்
உன் சிறகுகள்
துருப்பிடித்திருக்கும்//

எனக்கு பிடித்த வரிகள் இவை!

'காதல் செய்! சொர்க்கமோ, நரகமோ இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்!' என்ற வைரமுத்து கவிதை நடையில், தழுவி எழுதப்பட்டது.

5 comments:

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் குமரன்.

முதல் காக்க்கையா நான்:)

குமரன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி!

Anonymous said...

azhagana unmaiyai yathaarththathai koorum varikal..
ithuthanga unmai nilai...

really i like it...

ஷைலஜா said...

வாழ்த்துகள்!

Unknown said...

Vazhthukal. Email me your email address. Enjoy reading your posts.