Saturday, May 19, 2012

முள்ளிவாய்க்காலுக்குப் பின்! - பெண்களின் நிலை!

நேற்று மாலையில் தி.நகரில் "முள்ளிவாய்க்கலுக்குப் பின்"என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  நண்பருடன் போயிருந்தேன். பாண்டிமாதேவி என்பவர் தற்பொழுது ஈழத்துப்பெண்களின் அவலநிலையை சொன்னார்.  அதை உங்களுடன் பகிர்கிறேன்.

****

ஈழத்தில் இப்பொழுது 19 வயதிலிருந்து  35 வரை ஆண்களே இல்லை.  பலர் போரில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்டுவிட்டார்கள்.   பலர் காணாமல் (!) போய்விட்டார்கள்.  பலர் சிறையில் இருக்கிறார்கள். அதனால், அங்கு விதவை பெண்களும், கணவன், மகன் இல்லாத பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கென்று பாதுகாப்பான வீடு இலை. தார்ப்பாலின் அமைத்து தங்கியிருக்கிறார்கள். அது திறந்தவெளி வீடு போலத்தான்.  ஆண்கள் துணையில்லாமல் இருப்பதால், இரவில் இலங்கை இராணுவத்தினர் பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்.

ஆங்காங்கே இராணுவத்தினர் சோதனை செய்வதாக தடுப்பரண்களை உருவாக்கியிருக்கிறார்கள்.  பெண்குழந்தைகள் இதைத்தாண்டி தான் பள்ளிகளுக்கு செல்லவேண்டும்.  பள்ளிக்கு போகலாம். அது ஒருவழிப்பாதை தான். வீடு திரும்பமுடியாது.  அவர்களுக்கு கடந்தகால கசப்பான அனுபவம் நிறைய உண்டு.

முன்பு  ஒரு பெண்குழந்தை பள்ளிக்கு போனவள் திரும்பவே இல்லை.  தேடிப்போன அம்மாவும் திரும்பவில்லை.  பக்கத்துவீட்டுக்காரர் தேடிப்போனார். அவரும் திரும்பவே இல்லை.  மொத்தமாக பகுதி மக்கள் தேடிப்போய் கேட்டால் யாரும் இங்கு வரவில்லை என்றார்கள்.  பக்கத்தில் ஈரமண்ணைப் பார்த்து தோண்டிப்பார்த்தால், பல பெண் குழந்தைகளும், பெண்களும் அதில் இருந்தார்கள். இதனால் பள்ளிக்கு யாரும் தங்கள் பெண் குழந்தைகளை அனுப்புவதில்லை.

இப்படி இராணுவத்தினரால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாவாதிலேயே இளம்வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணத்தை நடத்திவிடுகிறார்கள்.  முதல் பிரசவத்திலேயே பலரும் இறப்பார்கள் என்பது எதார்த்தம்.

அங்கு இப்பொழுது யாருக்கும் வாழ்வதாரமே இல்லை.  ஆனால் சாராயம் மட்டும் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இருக்கின்ற சில ஆண்களும் குடிகளில் மூழ்கிகிடக்கிறார்கள். பெண்கள் தங்கள் உடலை விற்றுத்தான், பிள்ளைகளை காப்பாற்றவேண்டிய அவலநிலை.  சிங்களவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் மாதத்தின் முதல் வாரத்தில் அங்கு போய் வாசலில் நிற்கிறார்கள்.

****

3 comments:

Anonymous said...

யார் இந்த பாண்டிமாதேவி?
பொய்யின் மொத்த உருவம்.
விதவைகள் உருவானார்கள் புலிகளின் யுத்தத்தால் உருவானார்கள் புலிகள் இல்லாத தமிழர்கள் மகிழ்வாக இருப்பதை கண்டு களியுங்கள்
http://humanityashore.com/ha/archives/1422

Anonymous said...

Srilanka tamil are suffering because of LTTE's self-fish / money minded activities.

Anonymous said...

drug marketing by LTTE was main reasons for downfall