Tuesday, December 11, 2012

மாபெரும் தப்பித்தல்! அத்தியாயம் 2 ( Great Escape )

 மாபெரும் தப்பித்தல்! அத்தியாயம் 1

முன்குறிப்பு:  முதல் அத்தியாயத்தை படித்துவிட்டு, மேற்கொண்டு படிக்கவும்.  பதிவு கொஞ்சம் நீளமாக இருந்ததால், இரண்டாக தந்துள்ளேன். நன்றி.

****

ஒவ்வொருவரும் ஒரு பணியை மேற்கொண்டனர்.  தையற்காரர்கள் கொல்லர்கள், திருடர்கள், போலி ஆவணங்களைத் தயாரிப்பவர்கள் என்று பலரும் கமுக்கமாக மாதக்கணக்கில் பாடுபட்டனர்.  காவற்பணியில் ஈடுபட்டிருந்த ஜெர்மானிய வீரர்களின் கண்ணில் மண்ணைத்தூவும் விதமாக அவர்களின் கவனத்தை திருப்பவதிலும் ஏமாற்று கலையிலும் தனித்திறமை படைத்த வீரர்களின் குழுக்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் பணியில் இருந்த ஜெர்மானியரைச் சமாளிப்பதுதான் பெரிய சவாலாக இருந்தது.  தப்பியோடுபவரைக் கண்டுபிடிப்பதில் தனித்திறமை பெற்ற காவலர்கள் பலரை ஜெர்மானியர்கள் அமர்த்தியிருந்தனர்.  அவர்களைச் கைதிகள் மோப்ப நாய்கள் என்றழைத்தனர்.  சுற்றுச் சுவற்றினை அணுகக்கூடிய ஒவ்வொரு காவலாளியின் ஒவ்வொரு அசைவினையும் உன்னிப்பாக கண்காணிக்கக்கூடிய பாதுகாப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக்குழுவினர் சமிக்கைகள் மூலம் தங்கள் குழுவிலுள்ள மற்ற கைதிகளுக்கும் எச்சரிக்கை விடுப்பர்.

1944ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று, ஓராண்டுக் க்டும் உழைப்பிற்குப் பின்னர், சுரங்கப்பாதை வழியாக ஊர்ந்து சென்று சிறை முகாமுக்கு வெளியே காட்டுப்பகுதிக்குள் தப்பியோட 220 கைதிகள் ஆயுத்தமாயினர்.  அனைவரும் தப்பிச் செல்லும் வரை நிமிடத்திற்கு ஒருவராக அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். ஜெர்மன் மொழி பேசத் திரிந்த கைதிகளெல்லாம் புகைவண்டியில் ஏறி அயல்நாட்டு வேலையாட்கள் போல நடித்துக்கொள்ள வேண்டும்.  ஏனையோரெல்லாம் ஜெர்மானிய ரோந்துப்படையினரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காகப் பகலில் தலைமறைவாக இருந்து இரவில் பயணம் மேற்கொள்ளவேண்டும்.

சுரங்கப்பாதை வழியாக ஊர்ந்து சென்ற முதல் கைதி, தான் வெளியேறிய இடம் காட்டுப்பகுதிக்குச் சற்று முன்பாகவே இருப்பதைக் கண்டான்.  ஒரு நிமிடத்திற்கு ஒருவரை வெளியேற்றுவதற்குப் பதிலாக ஒரு மணி நேரத்தில் பன்னிரெண்டு பேரை மட்டுமே வெளியேற்ற முடிந்தது.  சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்படுவதற்குள் மொத்தத்தில் 86 பேர் தப்பித்துச் சென்றுவிட்டனர்.  நாஜிகள் கலவரமடைந்தனர்.  நாடு முழுவதும் கண்காணிப்புப் பணி முடுக்கிவிடப்பட்டது.  83 பேர் பிடிப்பட்டனர்.  அவர்களில் 41 பேர் ஹிட்லரின் ஆணைப்படி கொல்லப்பட்டனர்.  மூவர் மட்டுமே பிடிபடாமல் தப்பினர்.

இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 1963ல் வெளியான 'தி கிரேட் எஸ்கேப்' என்ற திரைப்படத்தினை இயக்கிய ஜான் ஸடர்ஜெஸ்,  கைதிகளுடைய பெரும் முயற்சியைப் பற்றி இப்படி குறிப்பிட்டுள்ளார்.  "இதற்கு 600க்கும் மேற்பட்ட கைதிகளுடைய ஒன்றுகுவிக்கப்பட்ட ஈடுபாட்டுணர்வும் விழிப்புணர்வும் தேவைப்பட்டது.  அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடம் உம், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும், ஓராண்டுக்கும் மேற்பட்ட காலம் அயராது உழைத்தனர்.  ஒருபோதும் மனித உழைப்புத்திறன் நம்பவியலாத வகையில் இந்த அளவிற்கு நீடிக்கப்பட்டதும் இல்லை.  இத்தகைய உறுதிப்பாட்டுணர்வும் நெஞ்சுரமும் வெளிப்படுத்தப்பட்டதும் இல்லை".

*****

ஜான். சி. மேக்ஸ்வெல் எழுதிய "குழுவில் சிறப்பாக செயல்பட 17 முக்கிய பண்புகள் - புத்தகத்திலிருந்து...."

படத்திற்கான சுட்டி :

The Great Escape Film

2 comments:

முத்து குமரன் said...

உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது. இது நான் பார்த்ததிலேயே சிறந்த படம் என்பதில் ஐயம் இல்லை.

முத்து குமரன் said...

அழகான விமர்சனம். நான் பார்த்த மிகச்சிறந்த படங்களுள் ஒன்று. நன்றி