Sunday, March 17, 2013

ஈழம் : போராட்ட செய்திகள் இனிமையானவை!

கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக செய்தி சானல்களை பார்க்க அவ்வளவு ஆசை ஆசையாக இருக்கிறது.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு பிறகு, ஈழ மக்களின் வாழ்வு புனரமைப்பு மற்றும் அமைதி நடவடிக்கை குறித்து இலங்கை அரசின் மீது, அமெரிக்கா ஐக்கிய நாட்டு சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வர இருக்கிறது.

இதை ஒட்டி தமிழகமெங்கும் மாணவர்களும், அனைத்து தரப்பினரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராடி வரும் செய்திகளை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பார்க்க பார்க்க அவ்வளவு அருமையாக இருக்கிறது.

ஆனால் போராடுபவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்தால்...

அமெரிக்க தீர்மானத்தின் தரம் படு மொக்கையானது. சாரமில்லாமல் வெறும் சக்கையானது.  இலங்கை உள்ளூர் ரவுடி என்றால் அமெரிக்கா உலக ரவுடி. உலகத்தில் போர்க்குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டுமென்றால், முதலில் தண்டிக்கப்பட வேண்டிய ஆள் அமெரிக்கா தான். இப்பொழுது அமெரிக்காவையே நீதிபதியாக மாற்றுவது அபத்தமானது.

அடுத்து, இந்தியா அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பது...

அமெரிக்க தீர்மானமே மொக்கையானது.  இனப்படுகொலையில் இலங்கை முதல் குற்றவாளி என்றால், இரண்டாவது குற்றவாளி இந்தியா.  ஈழத்து மக்களின் ரத்தக்கறை படிந்தவர்களையே தீர்மானத்தை ஆதரி என்பது இந்தியாவை போர்க்குற்றத்திலிருந்து நாம் தப்பிக்க வைக்கிறோம். மேலும், இந்திய அரசை அம்பலப்படுத்த வேண்டும்.

இருப்பினும் பரவாயில்லை.  இப்பொழுது தானே போராட துவங்கி இருக்கிறோம். சரி தவறு என விவாதித்து சரியான பாதைக்கு விரைவில் வந்துவிடுவோம்.  அதனால், நம்பிக்கை இருக்கிறது.

மக்கள் எழுச்சியில் போகிற போக்கில் பல்வேறு குப்பைகள் அடித்து செல்லப்படும் என்பார்கள். இந்த போராட்டத்திலும் அப்படிப்பட்ட காட்சிகள் நிறைய காண கிடைக்கின்றன. நேற்று நாரயணசாமி அலுவலகத்தை முற்றுகையிட்டு இருக்கிறார்கள்.  கருணாநிதி மத்திய கூட்டணியிலிருந்து கழன்று கொள்வேன் என வீராவேசம் காட்டியிருக்கிறார்.

இந்த மக்கள் போராட்டம் வலுக்க வலுக்க எதிரிகள் யார், நண்பர்கள் யார் என நன்றாக புலப்படும்.  விரைவில் சரியான திசைவழியில் பயணப்படுவோம்.

2 comments:

Anonymous said...

உண்மைதான் நண்பரே.மக்களின் போராட்டம் அரசியல் வாதிகளை இறங்கி வரவைக்கும் .அதுடன் உண்மைகளை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது .
தமிழ்நாட்டில் பெருகி இருக்கும் செய்தி சேனல்களும் மக்களிடம் உண்மையான் தகவல்கள் போய் சேர ஒரு காரணம் ,கடந்த காலங்களில் பத்திரிகைகள் உட்பட சில ஊடகங்கள் உண்மையான செய்திகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்தன ,

Anonymous said...

நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன் என் மதிப்போ மிகப்பெரிது
நான் எல்லவ்ற்றையும் சரியாக்ச் செய்கிறவன்
என் அழகும் என் ஜொலிப்பும் ,அற்ற எல்லரைக் கட்டிலும் மிஞ்சியது
உம்மைப் போன்றோருக்கு என் எஜமானே பொன்னே மிகச் சிறந்தது

பதில் ஏதும் சொல்லாமல் எஜமன் கடந்து சென்றார்.

ஒருங்கி ஓங்கி நின்ற வெள்ளிப்பாத்திரத்தைக் கண்டார்
என் அன்பார்ந்த எஜமனே, நான் உம்மையே சேவிப்பேன்,
உமக்கு திராட்ச ரசம் ஊற்றித்தருவேன்
நீர் உண்ணும்போது, மேஜையில் உம் அருகாமையிலிருப்பேன்
என் மீது செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலை எவ்வளவு அழகு!
நிச்சயமாக வெள்ளிப்பாத்திரமே உமக்கு பாராட்டுதலைப் பெற்றுத்தரும்.

எஜமான் இப்பொழுது வெங்கலப்பாத்திரத்தின் பக்கமாக வந்தார்
தட்டையான தோற்றம், அகன்றவாய், கண்ணாடி போன்ற மினுமினுப்பு
கடக்க முற்பட்டவ்ரை, எஜமனே நான் இங்கே இருக்கிறேன்"
எல்லா மனிதர்களும் பர்க்கதக்கதாக என்னை மேஜையில் வையும்
நான் அலங்கரமாயிருப்பேன் என்றது "

எஜமனே என்னைப்பாரும்" என்றது பளிங்குப்பாத்திரம்.
எளிதில் உடைந்து போகும் தன்மை எனக்கிருந்தாலும்
பயத்தோடே உம்மை சேவிப்பேன் என்றது

எஜமான் மரப்பாத்திரத்தின் அருகே வந்தார்
சிற்ப வேலையோடமைந்திருந்த மினுமினுப்பான தோற்றம் "
என் அன்பார்ந்த எஜமானே என்னைப் பயன்படுத்தலாமே" என்றது மரப்பாத்திரம். "
பழவகைகளை என்னில் வைத்து பாதுகாக்கலாமே என்றது

எஜமான் இப்பொழுது களிமண் பாத்திரத்தை பரிவோடு பர்த்தார்
கீறல் விழுந்த காலிப் பாத்திரம், தேடுவரற்ற நிலையில் கிடந்தது
எஜமான் தெரிந்தெடுத்து சுத்தப்படுத்தி சரி செய்து பயன்படுத்த
எந்த நம்பிக்கையுமற்ற பாத்திரம்

இப்படிப்பட்ட பாத்திரத்தைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்
இதை சரிப்படுத்தி என் உபயோகத்திற்கு வைத்துக் கொள்வேன்
பெருமை பாராட்டிக்கொள்ளும் பாத்திரங்கள் எனக்கு தேவையில்லை
அலமாரியில் அலங்காரமய் இருப்பதும் எனக்கு தேவையில்லை
பெரிய வாயோடு பெருமை பராட்டிக் கொள்வதும் எனக்கு தேவையில்லை
தன்னுள்ளிருப்பதை பெருமையோடு எடுத்துக்காட்டுவதும் எனக்கு தேவையில்லை

களிமண் பாத்திரத்தை மெதுவாக தூக்கினார், சரி செய்து சுத்தம் செய்தார்.
தம்மிலுள்ளவற்றால் நிரப்பினார். அன்போடு அதனுடன் பேசினார்.
" நீ செய்ய வேண்டிய வேலையொன்று உண்டு
நான் உனக்குள் ஊற்றுவதை வாங்கி நீ மற்றவர்களுக்கு ஊற்று"