Wednesday, April 3, 2013

கேடியுமில்லை! கில்லாடியுமில்லை! ‍ மொக்கை!

ஒரு படம் பார்த்தால் உணர்வுநிலை மேம்பட, குறைந்த பட்சம் சிரிக்க, கோபப்பட, எரிச்சலூட்ட‌ இப்படி ஏதாவது ஒன்றையாவது செய்யவேண்டும்.  சில படங்கள் இதில் எதையுமே செய்வதில்லை.  இந்த படம் அந்த வரிசையில் ஒருபடம்! விமர்ச்சிக்கிற அளவுக்கு ஒர்த் இல்லாத படம்.

*****

கதை என எதையும் சொல்வதற்கில்லை.  ஊரை வெட்டியாய் சுற்றும் இருவர். சூரியோடு சேர்த்து மூவர்.  கவுன்சிலர் தேர்தலில் ஜெயித்தால் சொகுசு வாழ்க்கை வாழலாம் என்ற கனவோடு வலம் வரும் இளைஞர்களின் கதை.

விட்டேத்தியான இளைஞர்களை கதையின் நாயகர்களாக எடுத்து, இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என சொல்வார்கள் என எதிர்ப்பார்த்தால், 99% படம் முடியும் வரை ஜவ்வாக இழுத்துக்கொண்டே போய், இறுதியில் ஒரு அப்பாவை கொன்று, இன்னொரு அப்பாவை அழவைத்து ஒப்பேத்தியிருக்கிறார்கள். இந்த இறுதி செய்தியை பார்ப்பதற்கு பலர் இருக்கமாட்டார்கள். எழுந்து போயிருப்பார்கள்.

நகைச்சுவை தோரணங்கள்; அதில் பலவற்றுக்கு சிரிப்பு வரமாட்டேன் என்கிறது.  ஆனால் என்னைச் சுற்றி உட்கார்ந்திருத சிலர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒன்னும் புரியல!

இப்படிப்பட்ட மொன்னையாக படங்கள் வருவதும் வெற்றியடைவதும் ஆரோக்கியமானதல்ல!  பல இயக்குநர்கள் சரக்கு இல்லாமல் தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பிழைப்பு செம ஜாலியாகிவிடும்.