Sunday, February 2, 2014

கூடங்குளம்! - கவிதை

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நாம் வருவோம் என்ற நம்பிக்கைகளோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நாம் வரும்வரை காத்திருப்போம் என்ற உறுதியோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமக்கும் அது புரியுமென்ற உறுதியோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமது கைகள் அவர்கள் கைகளோடு கோர்க்கும் என்ற தோழமையோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமது வாரிசுகளின் எதிர்காலத்தையும் தமது தோள்களில் சுமந்தபடி

அவர்கள் காத்திருக்கிறார்கள்
விடியல் தேடி நாலாபுறமிருந்தும்
அவர்களின் கூடாரங்கள் நோக்கி
நாம் அணிவகுத்து வருவோம் என்ற கனவுகளோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
நமக்கும் சேர்த்து ஆண்டுகள் மூன்றாய்
அயராது போராடிக் கொண்டே

அவர்கள் காத்திருக்கிறார்கள்
தங்கள் உயிரையும் வாழ்வையும் துச்சமென முன்வைத்து.
நமது படையணிகள்
எல்லாபுறமும் சூழந்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்யுமென்ற லட்சியத்தோடு

அவர்கள் காத்திருக்கிறார்கள்
மக்கள் மகத்தானவர்கள் என்ற கம்பீரத்தோடு!

- மகேஷ்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் நிறைவேறும்...